திருமுறைகளின்
மகிமை
புனலில் ஏடெதிர் செல்லெனச் செல்லுமே;
புத்த
னார்தலை தத்தெனத் தத்துமே;
கனலில் ஏடிடப் பச்சென்(று) இருக்குமே;
கதவு
மாமறைக் காட்டில் அடைக்குமே;
பனையில் ஆண்பனை பெண்பனை ஆக்குமே;
பழைய
என்புபொற் பாவைய தாக்குமே;
சிவன ராவிடம் தீரெனத் தீருமே;
செய்ய
சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே.
தலைகொள் நஞ்சமு தாக விளையுமே;
தழல்கொள்
நீறு தடாகம தாகுமே;
கொலைசெய் ஆனைகுனிந்து பணியுமே;
கோள
ராவின் கொடுவிடம் தீருமே;
கலைகொள் வேத வனப்பதி தன்னிலே;
கதவு
தானும் கடுகத் திறக்குமே;
அலைகொள் வாரியிற் கல்லும் மிதக்குமே;
அப்பர்
போற்றும் அருந்தமிழ்ப் பாடலே.
வெங் கராவுண்ட பிள்ளையை நல்குமே;
வெள்ளை
யானையின் மீதேறிச் செல்லுமே;
மங்கை பாகனைத் தூது நடத்துமே;
மருவி
யாறு வழிவிட்டு நிற்குமே;
செங்க லாவது தங்கம தாக்குமே;
திகழும்
ஆற்றிட்டுச் செம்பொன் எடுக்குமே;
துங்க வான்பரி சேரற்கு நல்குமே;
துய்ய
நாவலூர்ச் சுந்தரர் பாடலே.
பெருகும் வைகை தனையடைப் பிக்குமே;
பிரம்ப
டிக்கும் பிரான்மேனி கன்றுமே;
நரியெ லாம்பரி யாக நடத்துமே;
நாடி
மூகை தனைப்பேசு விக்குமே;
பரிவிற் பிட்டுக்கு மண்சுமப் பிக்குமே;
பரமன்
ஏடெழுதக் கோவை பாடுமே;
வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே;
வாத
வூரர் வழங்கிய பாடலே.
No comments:
Post a Comment