Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
1/255, J. J. Nagar Mugappair East,
Chennai-37
Cell
: 9600068631 - 9600068931
சித்தர் கர்ம யோக சாஸ்திரம் – அறிமுகவுரை
ஊழ்வினையை அடிப்படையாகக்கொண்டு இவ்வுலகில்
பிறந்த மானிடர்கள் ஒழுக்க நெறிகொண்ட புண்ணியத்தை பெருக்குகின்ற கடமைகளைச்செய்வதன்
மூலம் உயர்வு பெறலாம் என்னும் நெறியை உணர்த்துவதே கர்ம யோக சாஸ்திரமாகும்.
“கர்ம யோகம்” மட்டும் ஒரு ஆன்மாவின் வினை வலிமையை உயர்த்தவும்
தாழ்த்தவும் செய்யக்கூடியதாகும். உடல்நிலையை வலிமைப்படுத்தி அதன் மூலம் சுவாச நிலையைக்கட்டுப்படுத்தி மூன்றாம்
கண்ணாக விளங்கும் நெற்றிக்கண்ணைத்திறந்து
உயர்வு பெறத்தக்க மார்க்கம் வாசி யோகம் என்பதாகும். ஆனால், வாசி
யோகத்தை திறம்படப்பயின்று அதனை செயலாக்கம் செய்து வெற்றி காண்பது மிகவும் கடினமான
செயலாகையால் கர்மயோக வழியில் கடமைகளின் மூலமே ஞானக்கண்ணைத்திறக்க வழிவகை செய்யும்
மார்க்கமே கர்ம யோகமாகும்.
கலியுகத்தில் பலதரப்பட்ட மக்களால் மதம், மொழி
போன்ற எந்தவித வித்தியாசங்களுக்கும் கட்டுப்படாமல்; அதிக
சிரமங்கள் இல்லாமல் எளிமையாகப்பின்பற்றி உயர்வடையும் மார்க்கங்களை “சித்தர்
கர்ம யோக சாஸ்திரம்” கூறுகின்றது.
சித்தர்கள் பின்பற்றி தீவினைகளை நீக்கி நல்வினைகளைப்பெற்று நினைத்ததெல்லாம் பெற்ற
சிறப்புடைய அபூர்வ யோக முறை ”சித்தர் கர்ம யோகமாகும்” என்று அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராக
விளங்கக்கூடிய கோரக்கச்சித்தருக்கு உபதேசிக்கின்றார்.
சித்தர் கர்ம யோகம் - வகைகள்
சித்தர் கர்ம யோகமானது செய்தல், செய்வித்தல் என்னும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு
இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. அவையாவன: (1) தன்பால் கர்ம யோகம் (2) பிறபால் கர்ம யோகம்
(1)தன்பால்
கர்ம யோகம்
தன்பால் கர்ம யோகமானது தனக்கும் தன்னைச்சார்ந்த
ரத்தத்தொடர்புடைய உறவினர்களுக்கும் கடமையாற்றுவதாகும். தன்னை உயர்த்திக்கொள்ள
முதலில் தன்னுடைய ஓழுக்கத்தை வளர்த்துக்கொண்டு, தர்மநெறிகளுக்குட்பட்டு
தான் வாழவேண்டும். தன்னைச்சார்ந்த தாய், தந்தை, பாட்டன், பாட்டி, மாமன், மாமி, மனைவி, குழந்தைகள்
மற்றும் உடன் பிறந்தோர் போன்றவர்களை நல்வழிப்படுத்தி, தர்மத்திற்குட்பட்டு
அவரவர்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமைகளைக்குறைவில்லாமல் செய்து அவர்களையும்
தர்மக்கடன்களார்க்கச்செய்து அவர்களின் வாழ்விலும் உயர்வான
நல்வினைகளைச்சம்பாதிக்கச்செய்து உயர்வான வாழ்வை அடையச்செய்வதாகும் என்று அருள்குரு
காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய கோரக்கச் சித்தருக்கு உபதேசிக்கின்றார்.
(2)பிறபால்
கர்ம யோகம்
பிறபால் கர்ம யோகமானது உறவல்லாத பிற ஆன்மாக்களுக்கு
கடமையாற்றுவதாகும். தான் ஒழுக்கத்தில் சிறந்து ஓங்கி தர்ம நெறிக்குட்பட்ட வாழ்க்கை
நடத்துவதைப்போன்று தம்மால் முடிந்தவரை அவற்றை நம்மோடு நட்பு கொண்டவர்களுக்கும்
உபதேசித்து அவரவர் கடமைகளை முறையாகச்செய்வித்து அவரவர்களின் வாழ்விலும் உயர்வான
நல்வினைகளை சம்பாதிக்கச்செய்து உயர்வாழ்வை அடையச்செய்வதாகும் என்று அருள்குரு
காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய கோரக்கச்சித்தருக்கு உபதேசிக்கின்றார்.
Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service
Price Rs-20, 6-Month
Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com
No comments:
Post a Comment