Sri Bala Thirupurasuntari Jothidam
1/255, J. J. Nagar Mugappair East,
Chennai-37
Cell
: 9600068631 - 9600068931
விஸ்வாமித்திரமுனிவர் அயோத்தியை அடைதல்
இரு முனிவர்களின் சபதங்களையும் கேட்ட
தேவேந்திரன் அவ்வாறே ஆகட்டும் என்று சொன்னார். விஸ்வாமித்திரமுனிவர்
தனக்குத்துணையாக எமதர்மராசனையும் சுக்கிரபகவானையும் அழைத்துக்கொண்டு பூலோகம்
சென்று அயோத்திமாநகரை அடைந்தார். சத்தியக்கீர்த்தியை பிரதம அமைச்சராகக்கொண்டு தன்
மனையாளான சந்திரமதியுடனும் தன் மகன்
லோகிதாசனுடனும் இன்பமாக சத்தியம் தவறாது ஆட்சி செய்துகொண்டு வாழ்ந்துவரும்
அரிச்சந்திரன் அவையை விஸ்வாமித்திரமுனிவர் அடைந்தார். விஸ்வாமித்திரரைக்கண்டு
மகிழ்ச்சியடைந்த அரிச்சந்திரமன்னன் தன் மந்திரியாகிய சத்தியகீர்த்தியோடும்; தன் மனைவியாகிய சந்திரமதியோடும்; தன்மகன் லோகிதாசனோடும் சென்று விஸ்வாமித்திரமுனிவரை வணங்கி
வரவேற்று ஆசனத்தில் அமரவைத்தார். அரிச்சந்திர மன்னன் விஸ்வாமித்திரமுனிவரை வணங்கி
அய்யா! தாங்கள் என்ன நலன்கருதி எம் அவைக்கு வருகைபுறிந்திருக்கிறீர்கள் என்பதை
அறிய ஆவலாக இருப்பதாக தெரிவித்தார்.
விஸ்வாமித்திர முனிவரின் முதல் கட்ட சோதனை
அரிச்சந்திரனின் சத்தியத்தை சோதனை செய்ய
திட்டமிட்ட விஸ்வாமித்திரர் அதற்கான முதல் நடவடிக்கையில் இறங்க ஆயத்தமானார்.
அரிச்சந்திரனைப்பார்த்து தருமநெறி தவராமல் வாழும் அரிச்சந்திர மன்னனே! நான்
இவ்வுலக நலன் கருதி பெரியதொரு யாகத்தை செய்ய எண்ணியிருக்கின்றேன் ஆகபடியினாலே
அதற்குண்டான பொருளுதவியை நாடி உங்களிடம் வந்திருக்கின்றேன் என்று சொன்னார்
விஸ்வாமித்திரமுனிவர். விஸ்வாமித்திரரின் வார்த்தையைக்கேட்ட அரிச்சந்திரன் உலக
நலன் கருதி நடத்த இருக்கின்ற உயர்ந்த யாகத்திற்கு பொருளுதவி செய்வது
பெரும்புண்ணியமாயிற்றே ஆகபடியினால் அதற்குண்டான முழு பொருளுதவியும் நான்
தருகின்றேன் என்று விஸ்வாமித்திரரிடத்திலே வாக்களித்து யாகத்திற்கு எவ்வளவு பொருள்
தேவை உடனடியாகச்சொல்லுங்கள் உடனடியாகக்கொடுத்து
விடுகிறேன் என்று விஸ்வாமித்திரரை நோக்கி வினவினார்.
அரிச்சந்திரனின் தர்ம
வார்த்தைகளைக்கேட்டுக்கொண்ட விஸ்வாமித்திரமுனிவர் தனக்குத் தேவையான பொருளின்
அளவைக்கூற ஆரம்பித்தார். ஒருவட்டப்பாறையின் மீது ஒரு யானையை ஏற்றி அந்த யானையின்
மீது ஒரு இளம் வாலிபரை அமர்த்தி ஒரு வில்லைக்கொண்டு ஒரு அம்பை மேல் நோக்கி
எரியச்செய்தால் அந்த அம்பு எவ்வளவு உயரத்திற்குச்செல்லுமோ அந்த அளவு பொன்
வேண்டுமென்று அரிச்சந்திரனிடத்திலே சொன்னார். தர்மத்தின் தலைவனான அரிச்சந்திரன்
இல்லையென்று சொல்லாமல் அவ்வாறே அவ்வளவு பொன்னையும் விஸ்வாமித்திரரின் பாதத்திலே
சமர்ப்பித்தார். பொன்பொருளை ஏற்றுக்கொண்ட
விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனை நோக்கி அய்யா! சத்தியத்தின் தலைவனே! நான் இப்பொழுது
அவசரமாக வேறொரு இடத்திற்குச்செல்கிறேன் ஆகபடியினாலே இவ்வளவு பொன்பொருளையும்
இப்பொழுது என்னால் எடுத்துச்செல்லமுடியாது ஆகையினாலே நான் யாகம் செய்வதற்குண்டான
நாள் குறித்த பிறகு தேவைப்படும் பொழுது உங்களிடம் வந்து நான் பெற்றுக்கொள்கிறேன்.
ஆகபடியினாலே நான் திரும்பிவந்து கேட்கும் வரை இவ்வளவு பொன்னையும் உங்கள்
அரசாங்கக்கருவூலத்தில் தனிப்பேழையில் விஸ்வாமித்திரர் பொருள் என்று எழுதி
பாதுகாத்து வையுங்கள் நான் சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு அரிச்சந்திரனிடம்
விடைபெற்றுச்சென்றார் விஸ்வாமித்திரர்.
Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service
Price Rs-20, 6-Month
Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com
No comments:
Post a Comment