Tuesday 26 November 2013
பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
மூலவர் : பாண்டவ தூதர்
அம்மன்/தாயார் : சத்யபாமா, ருக்மணி
தீர்த்தம் : மத்ஸ்ய தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பாடகம்
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து அன்று வெஃகணை கிடந்தது
எண்ணிலாத முண்ணெலாம் அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே.-திருமழிசையாழ்வார்.
திருவிழா:கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம்.
அருளாளப்பெருமாள் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி
நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் நடக்கிறது.
தல
சிறப்பு:கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த
திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.
திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், 28,
பி, பாண்டவதூதப் பெருமாள் கோயில் தெரு, காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம்
மாவட்டம்.
பொது தகவல்:ரோகிணி
நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கற்றறிந்தவர்களுடன் நட்பை
விரும்புபவராகத் திகழ்வர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள்
ஊர் சுற்றும் இயல்பைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த
நம்பிக்கை உண்டு. இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு இருக்கும். மக்கள்
செல்வாக்கு சிறப்பாக இருக்கும். மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ்
அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை:ரோகிணி நட்சத்திரக்காரர்கள்
தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை
தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது
நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை
பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலம். எனவே இங்கு
அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72,000 அங்க நாடிகளும்
துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி,
ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு.
தலபெருமை: கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ
தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து
தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில்
காட்டியருளினார். பெருமாளின் சிலை 25 அடி உயரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில்
காட்சியளிக்கும் இவரை, இங்குள்ள கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிப்
பிட்டுள்ளனர். கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி
விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளுகிறார். எனவே இங்கு அடிப் பிரதட்சணம்,
அங்கப்பிரதட்சணம் செய்பவர் களுக்கு துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார்
எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள்
வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக
விளங்கினார். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார்.
எட்டாம்
தேதி விசேஷம்: ரோகிணி தேவி, இத்தலத்து பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும்
பேறு பெற்றாள். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில் ஞான
சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த
பிறகே ஏனைய நட்சத்திர தேவிகளை மணந்தார். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும்,
விஸ்வரூப தரிசனமும் கொடுத்த பெருமாளை, இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும்
வணங்க வருவதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன்,
சனிக்கிழமை, அஷ்டமி திதி, 8ம் தேதிகளில் இங்கு வழிபாடுசெய்வது சிறந்த
பலனைத்தரும்.
தல வரலாறு:பாண்டவர்களில் மூத்தவரான தர்மர்
கவுரவர்களிடம் தன் நாட்டை இழந்தார். ஆளுக்கொரு வீடு வீதம் ஐந்து
வீடுகளையாவது கேட்டுவாங்க, துரியோதனனிடம் தூது சென்றார் பகவான் கிருஷ்ணர்.
அவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். கிருஷ்ணர் அமர்வதற்காக போடப்
பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு பெரிய நிலவறையை (பாதாளம்) உண்டாக்கி அதன்மீது
பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கிருஷ்ணனும் அமர்ந்தார். திட்டப்படி நிலவறை
சரிந்தது, கிருஷ்ணரும் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்கினர் சில
மல்யுத்த வீரர்கள். அவர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார்.
பாண்டவர்களுக்காக தூது சென்ற இவரை பாண்டவதூத பெருமாள் என்பர்.
பாரத யுத்தம் முடிந்து வெகுகாலத்திற்கு பின், ஜனமேஜயர் என்ற மகாராஜா,
வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக்கதையை கேட்க வந்தார்.கிருஷ்ணர் தூது
சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும்
தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், என ரிஷியிடம் மன்னர்
வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார்.
பெருமாள், தன் தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.
சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி
உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு
எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.
ராமபிரானின் கதையை
தெய்வங்களைக்
குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை
சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத்திற்கு காரணம்.
திருடனாக இருந்த வால்மீகியை முனிவர் அந்தஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர்
தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந்து கொள்வோமே எனக் கருதி
அவரை மனதால் துதித்தார்.நாரதர் அவர் முன்பு தோன்றினார். வியாசமுனிவரே!
என்னை அழைக்க காரணம் என்னவோ?.
முனிவர்பிரானே! என் மனதில் ஒரு கேள்வி பிறந்துள்ளது.
கேட்கட்டுமா?.கேள்விகளில் இருந்து பதில்கள் பிறக்கின்றன. பிறப்பு தான்
உலகின் ஜீவநாடி. கேளுங்கள், இப்போது இந்த உலகிலேயே நல்ல குணமுள்ளவர் யார்?
யார் மிகுந்த தைரியசாலி? தர்மம் செய்வதில் யார் உயர்ந்தவர்? நன்றி
மறக்காதவர் யார்? சத்தியம் தவறாத உத்தமர் யார்? மன உறுதியோடு திகழ்பவர்
யார்? ஒழுக்கத்தை எக்காலமும் நழுவவிடாத உயர்ந்தவர் யார்? எதிரிகளுக்கும்
நன்மை செய்பவர் யார்? எல்லா கலைகளையும் கற்றவர் யார்? அதீத சக்தி பெற்றவர்
யார்? பார்த்த உடனேயே மனதிற்கு இனிமை தரும் இனியவர் யார்? உள்ளத்தில்
பொறாமையே இல்லாதவர் யார்? யாருடைய கோபத்தைக் கண்டு தேவர்கள்கூட
அஞ்சுகிறார்கள்? இப்படி பல கல்யாண குணங்களைக்கொண்ட உத்தமர் யாராவது
இவ்வுலகத்தில் வாழ்கிறார்களா? என கேட்டார்.
அவரது கேள்வியை நன்றாக
அசை போட்ட நாரதர், நீங்கள் கூறும் கல்யாண குணங்களைக்கொண்ட ஒரே மாமனிதர்
ராமபிரான் மட்டுமே. அவர் அயோத்தி மன்னர். இக்ஷ்வாகு வம்சத்தில்
அவதரித்தவர். புலனடக்கம் மிக்கவர். அவரைவிட அறிவில் சிறந்தவர்கள்
இவ்வுலகில் வேறு யாருமில்லை. எப்பேர்ப்பட்ட எதிரியையும் அவர்
அழித்துவிடுவார். பலம் பொருந்திய கைகள் அவரிடம் உண்டு. அகன்ற மார்பைக்
கொண்டவர். எப்போதும் வில்லுடன் திரிவார். அவர் நடந்தால் உலகிலுள்ள
அத்தனைபேரும் ரசிப்பார்கள். நடுத்தர உயரமுள்ளவர். அவரது மேனி கார்வண்ணம்
உடையது. ஆனாலும், அம்மேனி ஒளிவீசும் தன்மை கொண்டது. அமைதியே வடிவாக
இருப்பார். இந்த உலகத்தையே தாங்கும் சக்தி அவரிடம் உள்ளது. தர்மத்தை
எக்காலத்திலும் கைவிடாதவர். புத்தி சாதுர்யம் அவரைப்போல வேறு யாருக்கும்
இல்லை. துன்பக்கடல் சூழ்ந்து வந்தாலும் இமயமலையைப் போல அசையமாட்டார்.
அதேநேரம், கோபம் வந்துவிட்டால் அவர் அருகே யாரும் நிற்கமுடியாது.
அவரைப் பணிந்துவிட்டால் பூமாதேவியைப்போல பொறுமையின் சின்னமாகி விடுவார்.
செல்வத்தில் குபேரனையும் மிஞ்சுபவர். சத்தியவான். தர்மம் அவரிடம் மட்டுமே
இருக்கிறது என்றார். அது மட்டுமின்றி ராமபிரானின் கதை முழுவதையும்
சொன்னார். ராமனின் கதை கேட்ட வால்மீகி முனிவரின் கண்களில் நீர் கோர்த்தது.
இப்பேர்ப்பட்ட மகான் ஒருவர் பூமியில் வாழ்கிறாரா? என் கைகள் அவரை எழுத
வேண்டும். அந்த உத்தமனின் வரலாறு இப்பூமி உள்ளளவும் நிலைக்க வேண்டும், என
உணர்ச்சி பொங்கக் கூறினார். அன்று முதல் ராமனின் நினைவைத் தவிர அவர்
மனதில் வேறு எதுவுமே இல்லை. அவரை மனதில் எண்ணிக்கொண்டே தன் சீடருடன் தமசா
என்ற நதிக்கரைக்கு சென்றார். நதிக்கரையில் இருந்த ஒரு மரத்தில் இரண்டு
பறவைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு வந்த வேடன் ஒருவன் அம்பெய்தான்.
ஆண்பறவை அடிபட்டு இறந்தது. பெண் பறவை கதறியது. இதைக்கண்ட வால்மீகி முனிவர்
வேடன்மீது கடும் கோபமடைந்தார்.
வேடனே! இந்த ஜோடிப் பறவைகளைப்
பிரித்த நீ மனதில் நிம்மதி இல்லாமல் பல ஆண்டுகள் அலைவாய், என சாபமிட்டார்.
உலகத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தைப் பார்த்து, ராம நாமத்தை ஒரு நிமிடம்
மறந்த அவர் கோபத்திற்கு ஆட்பட்டார். முனிவராக இருந்தும் அவசரத்தில்
கோபப்பட்டுவிட்டோமே என வருந்தினார். அவர் சாபமிடும்போது பிரம்மதேவன் அங்கு
வந்து சேர்ந்தார். வால்மீகியின் சாப சொற்கள் கூட இலக்கியத்தரத்துடன்
அமைந்திருந்ததை கேட்டு ஆனந்தம் கொண்டார். இப்படிப்பட்ட இலக்கியவாதியால்தான்
ராமனின் சரிதத்தை நன்றாக எழுதமுடியும் என கருதினார். வால்மீகியின் முன்பு
பிரதட்சண்யமான அவர், முனிவரே! தாங்கள் இப்போது வேடனுக்கு சாபம்
கொடுத்தபோதுகூட எதுகை மோனையுடன் நாதமும் சந்தமும் கலந்து சாபம்
கொடுத்தீர்கள். இப்படிப்பட்ட திறமைவாய்ந்த நீங்கள்தான் புண்ணியமூர்த்தியான
ராமனின் திரு வரலாற்றை மகாகாவியமாக வடிக்க வேண்டும்,என்றார்.
ராமபிரானின் கதையை பாடத்துவங்கினார் வியாசர். கோசலநாடு மிகப்பெரிய நாடு.
செல்வச்செழிப்பு மிகுந்த நாடு. இந்நாட்டை சரயு என்ற நதி பாய்ந்து
வளப்படுத்திக்கொண்டிருந்தது. இதன் தலைநகரம் அயோத்தி. அயோத்தி என்ற
சொல்லுக்கு வெல்ல முடியாத நகரம் என பொருள். இந்நகரை யாராலும் கைப்பற்ற
இயலாது. சூரியகுல மன்னர்கள் இந்நாட்டை சிறப்புடன் ஆண்டு வந்தனர்.
ஆரம்பத்தில் மனு என்பவரும், அடுத்து இக்ஷ்வாகுவும், இதையடுத்து ரகு
என்பவரும் ஆண்டனர். இதன்பிறகு பொறுப்பேற்றவரே தசரத சக்கரவர்த்தி. தச ரதம்
என்ற சொல்லுக்கு பத்து தேர் என பொருள். ஒரே நேரத்தில் பத்து தேர்களை
இயக்கும் வல்லமை உடையவர் தசரத மகாராஜா. இதிலிருந்தே அவரது வீரத்தின் அளவை
தெரிந்துகொள்ளலாம். எந்த அளவுக்கு வீரம் இருந்ததோ அதே அளவுக்கு அவர் மனதில்
அன்பும் உண்டு. தன் நாட்டு மக்களிடம் கருணையைப் பொழிந்தார் தசரதர்.
தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல் முனிவர்களிடமும், அறிவு சார்ந்த
அமைச்சர்களிடமும், மகா பண்டிதர்களிடமும் ஆலோசனை கேட்டு அதன்படியே நடப்பார்.
அன்று, அரண்மனையில் தசரத மகாராஜா கவலையுடன் உலவிக் கொண்டிருந்தார்.
எதிர்காலத்தில் இந்நாட்டை காப்பாற்றப்போவது யார் என்ற கலக்கம் அவர்
முகத்தில் தெரிந்தது.
குழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது.
குழந்தை
இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற
அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய
நாட்டுமன்னன் தன் மகள் கைகேயியை இரண்டாம் தாரமாக திருமணம்
செய்துகொடுத்தார். ஆனால், அந்த பெருமாட்டிக்கும் குழந்தை பிறக்கவில்லை.
அவள் அழகில் மிகவும் சிறந்தவள். ராமாயண கதாபாத்திரங்களிலேயே அழகில்
சிறந்தவளாக காட்டப்படுபவள் கைகேயிதான். இதன்பின்னும் சுமித்ரா என்ற
பெண்மணியை தசரதர் திருமணம் செய்தார். அவள் அறிவில் சிறந்தவள். மூன்று
மனைவியர் இருந்தும் நாடாள ஒரு குழந்தைகூட பிறக்காதது அனைவர் மத்தியிலும்
கவலையை எழுப்பியது. இந்நேரத்தில் ராஜகுரு வசிஷ்டர் அரண்மனைக்குள் வந்தார்.
வாடிப்போயிருந்த தசரதரின் முகத்தைப் பார்த்தார். தசரதரின் கவலையை
குறிப்பால் உணர்ந்த அவர், தசரதா! நீ கவலை ஏதும் படவேண்டாம்.
ரிஷ்யசிருங்கர் என்ற முனிவர் இருக்கிறார். அவர் வேள்விகளை எவ்வித பங்கமும்
இல்லாமல் சிறப்பாக செய்யக்கூடியவர். அவரைக்கொண்டு அஸ்வமேத யாகமும்,
புத்திரகாமேஷ்டி யாகமும் செய்தால் குழந்தையும் கிடைக்கும். அத்துடன் இந்த
உலகமே உன் வசமாகும் என யோசனை சொன்னார்.
தசரதர் மகிழ்ந்தார்.
வேள்விகளின்போது மந்திர உச்சரிப்புகள் மிகச்சரியாக இருக்க வேண்டும். சிறிது
பிசகினால்கூட விளைவுகள் எதிர்மறையாக இருக்கும். ஆனால் ரிஷ்யசிருங்கரின்
நாக்கிலிருந்து வரும் ஒவ்வொரு மந்திர வார்த்தையும் எந்த பிசகும் இல்லாமல்
மிகத்தெளிவாக இருக்கும். வசிஷ்டர் கூறியபடியே சிருங்கர் மிகச்சிறப்பாக
இரண்டு வேள்விகளையும் செய்துமுடித்தார். அவரது ஆலோசனையின்படி, தசரதரும்,
அவரது மூன்று தேவியரும் மிகக்கடுமையான விரதங்களை மேற்கொண்டனர்.
இந்நேரத்தில் பூவுலகை ராவணன் என்ற அரக்கன் ஆண்டுகொண்டிருந்தான். அவனால்
நல்லவர்கள்கூட தீய வழிக்கு சென்றுகொண்டிருந்தார்கள். நல்லதைக்கற்றுக்
கொள்வதைவிட, தீயதை கற்றுக்கொள்வது மிகவும் எளிது. சாதாரண சுகங்களுக்காக
தீமையான மது, மாது, சூது ஆகிய விஷயங்களில் மக்களில் ஒருசாரார்
கெட்டுக்கிடந்தார்கள். விண்ணுலகிற்கு இந்த தகவல் எட்டியது. ராவணனின் புகழ்
பெருகுவதைப் பார்த்தால் தங்களது பதவிக்கும் ஆபத்து வரும் என தேவர்கள்
கருதினர். அவர்கள் பிரம்மனை அணுகி, விஷயத்தை எடுத்துரைத்தனர். அவர்களிடம்
பிரம்மா, தேவர்களே! அந்த ராவணனை யாராலும் கொல்ல முடியாது. அதற்குரிய வரத்தை
நானே அவருக்கு கொடுத்திருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்
அவன் தவறிவிட்டான்.
பூவுலகில் எந்தப் பொருளாலும் தனக்கு அழிவு
வரக்கூடாது எனக் கேட்ட அவன், மனிதர்களால் மட்டும் அழிவு வரக்கூடாது என
கேட்கவில்லை. எனவே, யாராவது ஒருமனிதனால் மட்டுமே அவனை கொல்ல இயலும்.
அப்படிப்பட்ட தைரியசாலிகள் யாருமே இல்லை. அவனது மூச்சுக்காற்று பட்டால்கூட
சாதாரண மனிதர்கள் அழிந்து போவார்கள். எனவே நாம் மகாவிஷ்ணுவை அணுகுவோம்.
அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்போம், என்றார். பிரம்மனும் தேவர்களும்
பாற்கடலில் துயில் கொண்டிருந்த பரந்தாமனை அணுகினர். அவர்களிடம் மகாவிஷ்ணு,
உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன். மண்ணுலகில் மானிடனாக பிறக்கிறேன். ராமன் என்ற
பெயரில் விளங்குவேன். ராமாவதார காலம் முடிந்தபின்பு மீண்டும் வைகுண்டம்
திரும்புவேன், என உறுதியளித்தார். தேவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேநேரம்,
ரிஷ்யசிருங்கர் நடத்திய வேள்வியும் நிறைவுபெற்றது.
வேள்விக்குண்டத்திலிருந்து கண்களால் உற்று நோக்கமுடியாத அளவுக்கு
படுபிரகாசமான ஒளிப்பிழம்பு எழும்பியது. அதிலிருந்து ஒரு உருவம்
வெளிப்பட்டது. அந்த உருவத்தின் கையில் பொன்னால் செய்யப்பட்ட ஒரு பாத்திரம்
இருந்தது. பாத்திரம் நிறைய தேவலோக பாயாசம் இருந்தது.
அவ்வுருவம்
தசரதன் அருகில் வந்து, மகாராஜா தசரதனே! மக்கள் மீது நீ மிகவும் அன்பு
வைத்திருக்கிறாய். மக்களைக் காப்பவரை ஆண்டவன் எப்போதும் விரும்புவான். நான்
கிருஷ்ணபரமாத்மாவின் தூதனாக இங்கே வந்திருக்கிறேன். இந்த தங்கப்
பாத்திரத்தில் உள்ள தேவலோக பாயாசத்தை ஏற்றுக்கொள். உன் மனைவியருக்கு இதை
பங்கிட்டுக்கொடு. இந்தப் பாயாசம் நோயற்ற வாழ்வைத்தரும். செல்வ வளம்
செழிக்கும். முக்கியமாக, நீ கேட்கும் புத்திரபாக்கியம் கிடைக்கும். உனக்கு
நான்கு குழந்தைகள் பிறப்பார்கள், என்றது. தசரதர் மிகுந்த மகிழ்ச்சியுடன்
பாயாச பாத்திரத்தைப் பெற்று அரண்மனைக்குத் திரும்பினார். அந்தப்
பாயாசத்தில் பாதியை முதல் மனைவி கவுசல்யாவுக்கு கொடுத்தார்.
மீதியிருந்ததில் பாதி பகுதியை சுமித்ராவுக்கு வழங்கினார். இதிலும் எஞ்சியதை
இரண்டு பங்காக்கி அதில் ஒரு பகுதியை கைகேயிக்கு கொடுத்தார். சற்று யோசனை
செய்துவிட்டு, மீதியிருந்ததை இரண்டாவது தடவையாக சுமித்ராவுக்கு
கொடுத்துவிட்டார். இவ்வாறு பாயாசத்தை பிரித்துக் கொடுத்ததன் விளைவாகத்தான்
பிற்காலத்தில் கைகேயியின் புத்தி தடுமாறி இருக்கவேண்டும். ஏனெனில்
கைகேயிக்கு மட்டுமே குறைந்த அளவு பாயாசம் கிடைத்தது. அவளால்தான் ராமாயணம்
என்ற காப்பியமே உருவாயிற்று. பாயாசத்தை அருந்திய தேவியர் மூவரும்
கர்ப்பமடைந்தனர். சித்திரை மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் ஐந்து
கிரகங்கள் உச்சத்தில் இருந்த நிலையில் கவுசல்யா தேவிக்கு ஸ்ரீ ராமபிரான்
அவதரித்தார். அடுத்தநாள் கைகேயி பூச நட்சத்திரத்தில் பரதனை பெற்றாள்.
ஆயில்ய நட்சத்திரத்தில் சுமித்ராவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
அவர்கள் லட்சுமணன் மற்றும் சத்ருக்கனன் ஆகியோர்.
பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்
பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்
சோமசுந்தரக் கடவுளின் அருளால் சாபம் நீங்கப் பெற்ற சகலனின் பிள்ளைகள்
சிவபூஜை செய்து வந்தனர். இவர்கள் சகல கலைகளிலும் வல்லவர்கள் ஆனார்கள். ஒரு
சமயம் அன்னை மீனாட்சி, சுந்தரேஸ்வரரிடம் பேசிக் கொண்டிருந்த போது, சுவாமி!
தாங்கள் அறிவற்ற பன்றிகளுக்கு கூட உணவுடன் ஞானத்தையும் ஊட்டிய காரணம் என்ன
என்பதைத் தெரிந்து கொள்ளலாமா? என்றாள். தேவி! அறிவுள்ளவன், அறிவற்றவன் என்ற
பேதம் மனிதர்களுக்கு மட்டுமே,
எனக்கில்லை. எல்லாரும் எனக்கு ஒன்று தான். அதனால் தான் பசியால் கதறியது
பன்றிகள் என்றாலும் கூட திருவருள் புரிந்தேன். அதனால் அப்பன்றிக் குட்டிகள்
அளவில்லாத வலிமையையும், வெற்றியையும் கல்வி முதிர்வையும், ஞானத்தையும்
பெற்றுக் கொண்டன. இனிமேல் அவர்கள் தங்கள் அறிவால் பாண்டியனின்
அமைச்சர்களாவதுடன் சிவகணங் களாகும் பேறையும் பெறுவார்கள், என்றார்
சுந்தரேஸ்வரர். அன்றிரவில், ராஜராஜப் பாண்டியனின் கனவில் தோன்றிய அவர்,
பாண்டியனே! பன்றிமலையில் வசிக்கும் பன்னிரு அறிவுஜீவிகளை உன் அமைச்சரவையில்
சேர்த்துக் கொள், என்றார். மறுநாளே, சுவாமியின் விருப்பப்படி பன்றிமலையில்
இருந்து அவர்களை வரவழைத்தான் மன்னன். அவர்களுக்கு அமைச்சர் பதவி
அளித்ததுடன், முந்தைய அமைச்சர்களின் புத்திரிகளையும் திருமணம் செய்து
வைத்தான். பன்றிமுக வீரர்கள் பன்னிருவரும், பாண்டியனுக்குக் கவசமும்
கண்ணும் போல் விளங்கினர். பன்னிரண்டு உடலுக்கும் ஓர் உயிரே என அனைவரும்
கூறும்படி ஒற்றுமையாக இருந்தனர். பன்னிருவரும் ஈகையும், அறமும், புகழுமள்
பாண்டியனுக்குப் பெருகுமாறு எட்டுத் திக்கிலும் வெற்றியுண்டாகச் செய்து
வாழ்ந்திருந்தனர். அவர்கள் பலகாலம் பாண்டியனுக்கு உதவியாகச் செயல்பட்டு
சிவபதவி பெற்றனர். இந்நிலையில் ராஜராஜனும் இறைவனடி சேர்ந்தான்.
அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் :காத்ர சுந்தரேஸ்வரர்
அம்மன்/தாயார் :துங்கபாலஸ்தானம்பிகை
பழமை :3000 வருடங்களுக்கு முன்
ஊர் :கஞ்சாநகரம்
மாவட்டம் :நாகப்பட்டினம்
மாநிலம் :தமிழ்நாடு
தல சிறப்பு:சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி
அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். 63 நாயன்மார்களில் மானக்ஞ்சார நாயனார்
இத்தலத்தில் தான் அவதாரம் செய்து முக்தி அடைந்துள்ளார்.
கார்த்திகைப்பெண்கள் அறுவரும் இங்கு அவதாரம் செய்ததாக கூறப்படுகிறது.
பொது
தகவல்:கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வந்தராகவும்,
திறமை மிக்கவராகவும் இருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் பிடிப்புடன் திகழ்வர்.
கலைகளை ஆர்வமுடன் கற்கும் சுபாவமிருக்கும். மனதில் மென்மை குடி
கொண்டிருக்கும். பெண்களிடம் நட்புடன் பழகும் இயல்பைப் பெற்றிருப்பர்.
கல்வியில் ஆர்வம் இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்குத் தேவையான தகுதிகள் யாவும்
இவர்களிடம் இருக்கும். கோயில் பிரகாரத்தில் செல்வ விநாயகர், நர்த்தன
விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், மேதா
தட்சிணாமூர்த்தி, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. மூலஸ்தான விமானத்தின்
மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது. மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில்,
வள்ளலார் கோயில், திருஇந்தளூர், பல்லவனீஸ்வரர் ஆகிய கோயில்கள் இத்தலத்தின்
அருகில் உள்ளன.
பிரார்த்தனை:கார்த்திகை
நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை
வழிபாடு செய்கின்றனர். திருமணத்தில் தடை உள்ள பெண்கள், குழந்தை பாக்கியம்
வேண்டுபவர்கள் வழிபாடு செய்கிறார்கள். சொத்து தகராறு, பிரிந்த குடும்பங்கள்
ஒன்று சேர இங்கு வழிபாடு செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க பெண்கள் இத்தலத்தில் சுமங்கலி பூஜை செய்கின்றனர்.
தலபெருமை:கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்றோ,
பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கை
வளம் பெறும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கார்த்திகை
நட்சத்திரப்பெண்கள் புண்ணிய நதிகளின் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு
அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம்
நடக்கும் என்பது ஐதீகம்.
வேதம் ஓதும் கிளி: மதுரை மீனாட்சியைப்
போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ் தானம்பிகையின் கையில் கிளி இருக்கிறது.
இதற்கு வேதாமிர்த் கீரம் என்று பெயர். மற்ற கரங்களில் நீலோத்பவ மலர்,
சங்கு, சக்கரம் வைத்திருக்கிறாள். சிவனே வேத சக்தியாக கிளி வடிவில்
அம்மனின் இடதுதோளில் அமர்ந்திருப்பது சிறப்பு. இது வேதமோதும் கிளியாகும்.
இத்தல அம்மனை வியாசரும், சுகப்பிரம்ம மகரிஷியும் வழிபாடு செய்துள்ளனர்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது
கார்த்திகை நட்சத்திர நாட்களில் இந்தக் கிளியை தரிசனம் செய்தால் சிறந்த
மணவாழ்க்கை அமையும். மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி
உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் இரவு சட்டநாதருக்கு சிறப்பு வழிபாடு
செய்யப்படுகிறது.
தல வரலாறு:பத்மாசுரன், சிங்கமுகன்
உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை
காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறைபோக்க
பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகம்
பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது. அம்மனின் வேண்டுதலால் தவம்
கலைந்த சிவன், காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும்
பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள்
புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின. முருகன்
பிறக்க காரணமான, இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம்
தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப்
போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்ற காரணமாக இருந்த இத்தல
இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம்
கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது. கார்த்திகா சுந்தரேஸ்வரர்
என்றால் ஆறுவிதஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்று பொருள்.
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு
மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். 63
நாயன்மார்களில் மானக்ஞ்சார நாயனார் இத்தலத்தில் தான் அவதாரம் செய்து முக்தி
அடைந்துள்ளார்.
தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார்.
தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப்
போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து பார்த்து
புளகாகிதமடைந்தார்கள். சகோதரர்கள் நால்வரும் கணமும் பிரிவதில்லை. ராமனும்
சுமித்திரை மகன் லட்சுமணனும் இணை பிரிவதே கிடையாது.
பரதனும் சத்ருக்கனனும் ஒன்றாகத் திரிவார்கள். இந்த சகோதர ஒற்றுமை உலக
சகோதரர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். ஒருவருக்கு
தலைவலித்தால், நான்கு பேருக்கும் வந்தது போல துடித்துப் போவார்கள். அப்படி
ஒரு ஒற்றுமை.மனைவியை விட நல்ல குழந்தைகள் அமைவது ஒருவனுக்கு கிடைத்தற்கரிய
ஒன்று. தசரத சக்கரவர்த்தி குழந்தைகள் விஷயத்தில் ரொம்ப கொடுத்து வைத்தவர்.
இன்றும் ராம லட்சுமணர்கள், பரத சத்ருக்கனர்கள் என்று தானே நாம் கூறிக்
கொண்டிருக்கிறோம். ஆனால், மனிதன் இன்பத்தை மட்டுமே அனுபவிக்க பிறந்தவன்
அல்லவே. அவன் துன்பக்கடலையும் கடந்தாக வேண்டுமே. ராமனின் பதினாறாவது
வயதிலேயே சோதனையும் வந்தது விஸ்வாமித்திர முனிவரின் ரூபத்திலே. அவர் அன்று
அரசவைக்கு வருகை தந்தார். இக்ஷ்வாகு குல மன்னர்கள் முனிவர்களின் பேச்சுக்கு
மிகுந்த மதிப்பளிப்பவர்கள். அவர்களைத் தெய்வமாய் போற்றுபவர்கள்.
விசுவாமித்திரரைப் பற்றி அனைவரும் அறிவர். கோபக்காரர். கோபமுள்ள இடத்தில்
குணமும் இருக்கும், திறமையும் இருக்கும் போலும்! தசரதர் விஸ்வாமித்திர
மகரிஷியை வரவேற்றார்.
வர வேண்டும் மாமுனியே! தாங்கள் ராஜகுமாரராக
அவதரித்தீர்கள். நாடாண்ட நீங்கள் இப்போது ராஜரிஷியாகி விட்டீர்கள்.
ராஜவம்சத்தவர், ஆன்மிகத்தில் முழுமையாக ஈடுபடுவதென்பது அசாத்தியமான ஒன்று.
ஆனால், தாங்கள் அதை சாத்தியப்படுத்தி விட்டீர்கள். தாங்கள் அரண்மøனியில்
தங்கிச் செல்வதன் மூலம், பெரும் பேறு அடைந்தவன் ஆவேன், என்று உபசரித்தார்.
இந்த உபசாரம் என்பது வெறும் புகழ்ச்சிக்காக அல்ல. உள்ளதை உள்ளபடி
எடுத்துரைத்ததுடன், உண்மையான உபசாரமாக இது அமைந்தது. விருந்தினர்களை
உள்ளன்போடு உபசரிக்க வேண்டும் என்பதைக் கூட ராமாயணம் நமக்கு கற்றுத்
தருகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், மனிதன் எப்படி நடந்து கொள்ள
வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் இனிய இதிகாசமல்லவா இது!
விஸ்வாமித்திரர் மகிழ்ந்தார். தசரதரை ஆசிர்வதித்தார். சக்கரவர்த்தி! நான்
தங்கிச் செல்லும் நிலையில் இல்லை. உன்னிடம் ஒரு உதவி நாடி வந்திருக்கிறேன்,
செய்வாயா?. தசரதர் பதறியும், நெகிழ்ந்தும் போனார். தங்களுக்கு உதவி
செய்யும் பாக்கியம் எனக்கு கிடைப்பதற்கே நான் கொடுத்து வைத்திருக்க
வேண்டுமே! என்னிடம் அனுமதி கேட்கவே தேவையில்லை. செய் என்றால் தலை வணங்கி
செய்து விட்டு போகிறேன், என்று வாக்கு கொடுத்து விட்டார் நடக்கப்போகும்
விபரீதத்தை அறியாமலே. ராஜாவின் சொற்கள் விஸ்வாமித்திரரின் முகத்தில்
மகிழ்ச்சி ரேகைகளை படரவிட்டன.
தசரதா! நான் உலக நன்மைக்காக
கானகத்தில் ஒரு யாகம் நடத்திக் கொண்டிருக்கிறேன். அந்த யாகத்தை தாடகை என்ற
அரக்கியின் புதல்வர்களான மாரீசன், சுபாகு என்பவர்கள் அழிக்க
நினைக்கிறார்கள். வேள்வி குண்டத்தில் மாமிச துண்டங்களை வீசியெறிந்து
வேள்வியின் நோக்கத்தையே சிதைக்க திட்டமிட்டுள்ளார்கள். என்னாலும் அவர்களை
அழிக்க இயலும். ஆனால், யாகம் நடத்துவதில் நான் மிக கவனமாக இருக்க
வேண்டியுள்ளது. மந்திரங்கள் சொல்வது இடையில் நின்று போகக்கூடாது. எனவே
வலுவான காவலன் ஒருவன் எனக்கு வேண்டும். அவன் உன்னிடம் தான் இருக்கிறான்,
விஸ்வாமித்திரர் சற்றே நிறுத்தினார். யாரது! சொல்லுங்கள் மகரிஷஇ. நான் உடனே
அவனை அனுப்புகிறேன். இது சத்தியம்,. தசரதர் விஸ்வாமித்திரருக்கு உதவுவதில்
இன்னும் ஆர்வம் காட்டினார். ராஜா! அவன் வேறு யாருமல்ல. இந்த ராஜா பெற்ற
மற்றொரு ராஜா, உன் பெரிய மகன் ராமன்,. ஆ.... தசரதர் அப்படியே ஸ்தம்பித்து
நின்று விட்டார். முனிநாதா! யாரைக் கேட்டீர்கள். என் சின்னஞ்சிறு பாலகன்
ராமனையா. பதினாறே வயது நிரம்பிய அந்த சிசுவையா? அவனால், எப்படி
அப்பேர்ப்பட்ட அசுரர்களை எதிர்க்க முடியும்? எனக்கு இது அதிர்ச்சியாக
உள்ளது,. விஸ்வாமித்திரர் கொதித்து போய் விட்டார். தசரதா! என்னிடமே
வார்த்தை மாய்மாலம் செய்கிறாயா? நான் சொல்வதை செய்வதாக வாக்களித்து விட்டு
உடனே தடம் புரண்டு விட்டாயே,. அவரது கனல் வார்த்தைகள் கேட்டு அனலில்
விழுந்த புழுவாய் துடித்தார் தசரதர்.
முனிவரே! வார்த்தைகளால்
என்னைக் கொல்லாதீர்கள். ராமனுக்கு பதிலாக நானே படைகளுடன் வருகிறேன்.
வேள்விக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் பாதுகாக்கிறேன். சிறுவனை அனுப்புவதில்
உள்ள சிரமத்தைத் தான் சொன்னேன். நான் வாக்கு தவறுபவன் அல்ல,. தசரதர் கதறாத
குறையாகச் சொன்னார்.விஸ்வாமித்திரருக்கு இன்னும் கோபம்.நான் உன் மகன்
ராமனைத்தான் என்னோடு அனுப்பச் சொன்னேன். உன்னை வரச் சொல்வதாக இருந்தால்
முதலிலேயே உன்னிடம் சொல்லியிருப்பேனே. ராமனை அனுப்புகிறாயா, இல்லையா?
விசுவாமித்திரர் மிரட்டினார். தசரதர் செய்வதறியாது திகைத்து நிற்கையில்,
அரசகுரு வசிஷ்டர் இடையில் புகுந்து நிலைமையை சாந்தமாக்கினார்.
விசுவாமித்திரரைப் பற்றி அவர் அறியாத விஷயங்களா என்ன? தசரதரை அழைத்தார்.
தசரதா! ஏனிந்த தயக்கம். நம் கண்மணி ராமன், அரக்கர்களை அழிக்க தகுதி
வாய்ந்தவனே! பதினாறு வயதிலேயே அவன் பெரும் சாதனை நிகழ்த்தப் போகிறான்.
அதற்குரிய சந்தர்ப்பம் அவனைத் தேடி வந்துள்ளது. இந்த சாதனையைச் செய்து,
இக்ஷ்வாகு வம்சத்தின் பெருமையை மேலும் உயர்த்துவான். அவனை முனிவருடன்
அனுப்பி வை,.அரசகுருவே சொன்ன பிறகு தசரதரால் என்ன செய்ய முடியும்? ஒருவாறாக
மனதைத் தேற்றிக் கொண்டு, ராமபிரானை அனுப்ப சம்மதித்தார். அப்போது இளைஞன்
ஒருவன் மன்னர் முன் துள்ளிக் குதித்து வந்து நின்றான். அவன் சொன்ன
வார்த்தைகள் தசரதரின் தலையை இன்னும் சுழல வைத்தது.
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
மூலவர் :ஆதிநாராயணப்பெருமாள்
உற்சவர் :ஆதிநாராயணப்பெருமாள்
அம்மன்/தாயார் :ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் :வன்னி
ஆகமம்/பூஜை :வைகானஸம்
பழமை :1000-வருடங்களுக்கு முன்
புராண பெயர் :சமீபனம் வன்னிமரக்காடு
ஊர் :எண்கண்
மாவட்டம் :திருவாரூர்
மாநிலம் :தமிழ்நாடு
திருவிழா:வைகுண்ட ஏகாதசி, கருட பஞ்சமி, கோகுலாஷ்டமி, ராம நவமி.
தல சிறப்பு:பொதுவாக பெருமாள் கோயில்களில், பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த
கோலத்தில் அருள்பாலிப்பார். அவரது எதிரிலோ, அருகிலோ கருடாழ்வார்
இருப்பார். திருவிழாக்காலங்களில் பெருமாள் கருடன் மீது எழுந்தருளி கருட
சேவை சாதிப்பபார். ஆனால் இத்தலத்தில் பெருமாள் அரசனுக்கு உடனடியாக
அருள்பாலிப்பதற்காக கருடவாகனத்தில் வந்ததால், மூலஸ்தானத்திலும் கருட
வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். எனவே பெருமாளுக்கு
இத்தலத்தில் நித்யகருட சேவைசாதிக்கப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை காண்பது
அரிது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
பொது தகவல்:மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: விசாலமான
புத்தியும், கூர்மையான அறிவும், திறமையும் பெற்றிருப்பர். செல்வம்
சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும்.
சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம்
காட்டுவர். பிறரின் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்கும் இயல்பைப்
பெற்றிருப்பர். பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், அனுமன், கருடன் சன்னதி
உள்ளது. திருவாரூர் தியாகராஜர், திருக்கண்ணமங்கை, நாச்சியார் கோவில்,
திருச்சேறை ஆகிய கோயில்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.
பிரார்த்தனை:மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும்
தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். குழந்தை பாக்கியம்
வேண்டுபவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், நாக தோஷம், பட்சி தோஷம்
உள்ளவர்கள் , தோல் நோயால் பாதிக்கப்பட்வர்கள், பகைவர்களால்
பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள்,
அடிக்கடி மரண சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை
பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள்,
பவுர்ணமி மற்றும் மிருகசீரிட நாட்களில் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.
படிப்புக் கேற்ற வேலை கிடைக்காதவர்கள் புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு
திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
நேர்த்திக்கடன்:ஸ்ரீஆதிநாராயணப் பெருமாளுக்கு தேன் கலந்த சர்க்கரைப்
பொங்கல், அதிரசம், பால் பாயசம் போன்ற இனிப்பு வகைகள் நிவேதனம்
செய்யப்படுகின்றன.
தலபெருமை:மிருகண்டு மகரிஷி இத்தல
பெருமாளை தினமும் அரூப வடிவில் வழிபடுவாதக கூறப்படுகிறது. மிருகசீரிடம்
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது
மிருகசீரிட நட்சத்திரத்தன்றோ இத்தல பெருமாளை வழிபாடு செய்தால், உடனே கருட
வாகனத்தில் ÷தான்றி நம்மை காப்பார் என்பது ஐதீகம். உற்சவர்
ஆதிநாராயணப்பெருமாள் பிரயோகச்சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன்
அருள்பாலிக்கிறார். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள், நல்ல
சம்பளத்துடன் கூடிய உயர்பதவி வேண்டுபவர்கள், புதன், சனிக்கிழமைகளில்
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
நித்ய கருட சேவை : பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில்
அருள்பாலிப்பது வழக்கம். எதிரில் அல்லது அருகில் கருடாழ்வார் இருப்பார்.
திருவிழாக்காலங்களில் கருடன் மீது எழுந்தருளி சேவை சாதிப்பார். ஆனால்,
இங்கு கருடன் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதுபோன்ற அமைப்பை
காண்பது அரிது. பெருமாளின் நித்யகருட சேவையை தினமும் இங்கு தரிசிக்கலாம்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று. இத்தல
பெருமாளை வழிபாடு செய்தால்,அவர்களின் பிரச்னை உடனடியாகத் தீரும் என்பது
நம்பிக்கை. கருட பகவானும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது
இம்மூர்த்தியின் சிறப்பாகும். மூலவர் தனித்தும், உற்சவர் ஸ்ரீபூமி,
நீளாதேவி சமேத நாராயணப் பெருமாளாகவும் காட்சி அளிக்கிறார்.
தல வரலாறு:ஒருமுறை பிருகு முனிவர் சமீவனம்(வன்னிமரக்காடு) என அழைக்கப்பட்ட
இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அப்போது சோழ அரசர்
ஒருவர் தன் படைகளுடன் பெரும் குரல் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட
வந்தார். இந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலைந்தது. கோபமடைந்த முனிவர்,
அரசனை நோக்கி,முனிவர்கள் தவம் செய்யும் இந்த வனத்தில் சிங்கத்தை வேட்டையாட
வந்து, தவத்தைக் கலைத்தாய். எனவே நீ சிங்க முகத்துடன் அலைவாய்,என
சாபமிட்டார். வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாடினார்.
மனம் இரங்கிய முனிவர், விருத்த காவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி,
இத்தல பெருமாளை வழிபாடு செய்து வரும்படி கூறினார். அரசனும் மனமுருகி
வழிபாடு செய்து வந்தான். மகிழ்ந்த பெருமாள் கருட வாகனத்தில் காட்சி
தந்தார். பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம்
கிடைத்தது. இதன்காரணமாக இத்தலம் மிருகசீரிட நட்சத்திரத்திற் குரிய கோயிலாக
போற்றப்படுகிறது.மிருகசீரிட சக்திகள் நிறைந்த எண்கண் தலத்தில்,
தைப்பூசத்தன்று விருத்த காவேரி எனப்படும் வெட்டாற்றில் நீராடி வழிபாடு
செய்து வரவேண்டும். கருடன்மீது பெருமாள் அமர்ந்து காட்சி அளிக்க, மயில்மீது
மால் மருகன் முருகனும் காட்சி அளிக்கும்போது உனது சாபம் நீங்கும் என்று
முனிவர் கூறினார். மேலும், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், அன்ன
வாகனம், மேஷ வாகனம் போன்ற 108 வித வாகனங்கள் செய்து இறைவனுக்குப் பெருவிழா
நடத்த வேண்டும் என்றும் நல்வழி காட்டினார். முனிவர் கூறியவாறே மன்னன்
பூஜைகள் நிகழ்த்தி இறைப்பணிகள் செய்து நல்லருளைப் பெற்று சிங்க முகம்
நீங்கப் பெற்றான்.
சிறப்பம்சம்:அதிசயத்தின்
அடிப்படையில்: பொதுவாக பெருமாள் கோயில்களில், பெருமாள் நின்ற, இருந்த,
கிடந்த கோலத்தில் அருள்பாலிப்பார். அவரது எதிரிலோ, அருகிலோ கருடாழ்வார்
இருப்பார். திருவிழாக்காலங்களில் பெருமாள் கருடன் மீது எழுந்தருளி கருட
சேவை சாதிப்பபார். ஆனால் இத்தலத்தில் பெருமாள் அரசனுக்கு உடனடியாக
அருள்பாலிப்பதற்காக கருடவாகனத்தில் வந்ததால், மூலஸ்தானத்திலும் கருட
வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். எனவே பெருமாளுக்கு
இத்தலத்தில் நித்யகருட சேவை சாதிக்கப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை காண்பது
அரிது.
சுருளிமலை அதிசயம்
சுருளிமலை அதிசயம்
உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.
மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம்
மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.
பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,தென்
இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" இதில்தான்
அமைந்துள்ளது.இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன்
விளங்கும் ஒரு மலைதான் "சுருளி மலை" ஆகும்.இம் மலை தேனி மாவட்டத்தில்
அமைந்துள்ளது.
சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 -வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது.அதில் உள்ள விபரம் :-
அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ? என்ற
தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்.
மதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.
ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டி ருக்கும்
சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது.இவ்வளவு நீர் எங்கி ருந்து
உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.
ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வ தில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்ற னர்.
அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை”
உள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும்
கவுடர்களில் "மார்கழியார்" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர்
தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெ டுக்கவும்,சுருளி மலையில் மறைந்துள்ள
"கிருஷ்ண பகவானின்" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம்
வளர்த்து,அன்ன தானம் செய்தனர்.அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்]
வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.
அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.குகைக்குள் நுழைவது அத்தனை
சுலபமல்ல.கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம்,மேலும் நிமிர்ந்த
நிலையில் உள்ளே புக முடியாது.! படுத்த நிலையில் தவழ்ந்துதான் போக
வேண்டும்.எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து
சென்றான்.சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள்
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.
உள்ளே மிகப்பெரிய அரங்கம்.ஒளி
உமிழும் உருண்டைகள் ஆங் காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப்
பட்டிருந்தனவாம்.திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான
உடலும்,நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ
கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.
மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும்,அது "தேவ ரகசியம்" என்றும் அந்த சிறுவன் கூறினான்.
சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு
அப்பால் தான் கேரளா,தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும்
“கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.
மதுரையை எரித்த
கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக
விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட
கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக
வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என
எதிர்பார்க்கலாம்
தசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன்
தசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு
யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற
பழமொழிக்குச் சொந்தக்காரன்.தந்தையே! என் சகோதரன் எங்கிருக்கிறாரோ
அங்கிருப்பதே எனக்கு பெருமை, வேலை, கடமை எனக்கருதுபவன்
நான். அவர் கானகம் சென்றால் நானும் அவருடன் செல்வேன். அவரின்றி நான்
இல்லை; அண்ணனுடன் செல்வதென முடிவெடுத்து விட்டேன், என்ற லட்சுமணனின் சொல்
கேட்டு தசரதருக்கு இன்னும் இக்கட்டான நிலைமை ஆயிற்று. ஒரே நேரத்தில் இரண்டு
மைந்தர்களை இழந்து விடுவோமோ என பயந்தார்.ஆனாலும், லட்சுமணனை தடுக்கும்
சக்தி அவருக்கில்லை. இருவரும் கானகம் செல்ல தசரதர் அனுமதி அளித்தார்.
விஸ்வாமித்திரர் அந்த வீர சகோதரர்களுடன் காட்டுக்கு புறப்பட்டார்.
காட்டிற்குள் மனித ஜீவன்கள் யாருமே வருவதில்லை. தடாகை விழுங்கி விடுவாள்
என்ற பயம். அங்கு வந்த பின், தாடகையை கொல்வதற்கு ராமன் யோசித்தார்.
ஏனெனில், அவள் ஒரு பெண். அரக்கியாக இருந்தாலும் பெண் என்பதால் அவளை
கொல்வதற்கு ராமனிடம் தயக்கம் இருந்தது. விஸ்வாமித்திரர் ராமனின் எண்ணத்தை
புரிந்து கொண்டார். ராமா, அவளுக்கு பெண்மைக்குரிய எந்த இலக்கணமும்
கிடையாது. மனித மாமிசம் உண்ணும் பெண்மணியை கொல்வதில் எந்த தவறும் இல்லை.
அவளை உடனே அழித்துவிடு, என்றார். ராமனும் விஸ்வாமித்திரரின் சொல்லில்
இருந்த நியாயத்தை உணர்ந்து வில்லை எடுத்து ஒலி எழுப்பினார். அவரது நாண்
அசைவில் அந்த கானகமே நடுங்கியது. விலங்குகள் ஓடி மறைந்தன. நாண் ஒலி கேட்டு
கலங்கிப் போன தாடகை வெளியே வந்தாள். யாரடா அவன்! எனது கானகத்திற்குள்
புகுந்து தைரியமாக வில்லை எடுத்தவன்! உன்னை ஒழிக்காமல் விடமாட்டேன், என
கர்ஜித்தவளாக வெளியே வந்தாள்.
ராமன் வில்லெடுத்து தாடகையின் மீது
அம்புமழை பொழிந்தார். தாடகை அலறிக் கொண்டே சாய்ந்தாள். உயிர் பிரிந்தது.
அவளது மறைவு செய்தி அறிந்த மகன்கள் மாரீசனும், சுபாகுவும் ராமனை தாக்க
பாய்ந்தோடி வந்தனர். சுபாகுவை அக்னி அஸ்திரத்தால் ராமன் சுட்டெரித்தார்.
மாரீசன் மீது மானவம் என்ற அஸ்திரத்தை எய்தார் ராமன். அது மயக்கும் சக்தி
வாய்ந்தது. மயங்கி போன மாரீசன், எங்கோ ஓடிப் போய்விட்டான். ராமாயணத்தில்
ராமனின் முதல் போர் இதுதான். போரில் வெற்றி பெற்ற ராமனை விஸ்வாமித்திரர்
பாராட்டினார். ராமனுக்கும், லட்சுமணனுக்கும் பலம், அதிபலம் என்ற இரண்டு
மந்திரங்களை கற்றுக் கொடுத்தார். மிக மிக களைப்பாக இருக்கும்போதோ, உடல்
நலமற்ற வேளையிலோ, கவனக்குறைவாக இருக்கும்போதோ உயிருக்கு ஆபத்து உருவாகலாம்.
அந்த சமயத்தில் இந்த மந்திரத்தை பக்தியுடன் சொன்னால் எந்த அதர்மமும்
அவர்களை அணுகாது. எனவே இந்த மந்திரங்களை ராம லட்சுமணர் மிகவும் கவனத்துடன்
படித்தனர். படித்ததற்குரிய சக்தியும் அவர்களுக்கு கிடைத்தது. அரக்கர்களின்
அழிவுக்கு பிறகு விஸ்வாமித்திரரின் யாகம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
யாகம் முடிந்த பின், விஸ்வாமித்திரர் ராம, லட்சுமணர்களை மிதிலாபுரி
நகருக்கு அழைத்தார். அந்நகரில், மிகச் சிறப்பு வாய்ந்த சிறப்பான வேள்வி
நடத்தப்பட இருந்தது. அதைப் பார்த்த பிறகு ஊர் திரும்பலாம் என்பது
விஸ்வாமித்திரரின் திட்டம். செல்லும் வழியில் கவுதம முனிவரின் ஆஸ்ரமத்தில்
அவர்கள் தங்கினர். அங்கே சில சீடர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. கவுதமர்
எங்கே என ராமன் விசாரித்தார். அவர் இமயமலைக்கு தவம் செய்ய சென்றுவிட்ட
விபரம் தெரிந்தது. முனிவரின் மனைவி அகலிகை. அழகில் சிறந்தவள். அவளது அழகைக்
கண்டு தேவேந்திரனே சபலப்பட்டான். ஒருமுறை கவுதமரைப் போலவே மாற்று உருவம்
எடுத்துவந்து அவளை அடைந்தான். கோபம் அடைந்த கவுதமர் இந்திரனின் உடலழகு
அழியும்படி சாபமிட்டார்.
அகலிகையை யார் கண்ணுக்கும் தெரியாமல் அதே
ஆஸ்ரமத்தில் வசிக்கும்படி சொல்லிவிட்டு, களங்கமடைந்த அவள் புனிதமாவது
எப்போது என்பது பற்றியும் சொல்லியிருந்தார். விஷ்ணு மானிடப் பிறப்பெடுத்து
எப்போது பூமிக்கு வருகிறாரோ அவரது பாதம் படும் இடத்தில் நீ இருந்தால்
மீண்டும் கற்புத்தன்மை பெறுவாய், என சொல்லியிருந்தார். இப்போது ராமபிரான்
முனிவர் தங்கியிருந்த ஆஸ்ரமத்திற்கு வந்துவிட்டதால் அகலிகை சாபம் நீங்கி
அனைவர் முன்னிலையிலும் தென்பட்டாள். அவள் கல்லாகக் கிடந்ததாகவும்
கூறப்படுவதுண்டு. அந்தக் கல்லின்மீது ராமனின் பாதம் பட்டதும் அவள் மீண்டும்
உருபெற்றாள் என்பார்கள். இந்த நேரத்தில் கவுதமரும் வந்து சேர்ந்தார்.
தம்பதியர் இணைந்தனர். அவர்கள் விஸ்வாமித்திரரையும், ராம லட்சுமணர்களையும்
கனிவுடன் உபசரித்தனர். அகலிகை சாப விமோசனத்திற்கு பிறகு, அவர்கள்
மிதிலாபுரி நகர் சென்றடைந்தனர். செல்வச்செழிப்பும், அறிவுடைய மக்களும்
இணைந்த பூமி அது. காரணம் அந்நகரில் லட்சுமி நிஜமாகவே வாசம் செய்தாள்.
அந்நாட்டை ஜனக மகாராஜா ஆண்டு வந்தார். அவரிடம் விசித்திரமான ஒரு வில்
இருந்தது. அதன் எடை மிக மிக அதிகமானது. அதை அசைக்கக்கூட யாராலும்
இயலவில்லை. மன்னர் ஜனகரின் அவையில் குரு சதானந்தர் இருந்தார். அவர் கவுதம
முனிவருக்கும், அகலியைக்கும் அவதரித்த திருமகன். மிதிலைக்கு வந்த ராம
லட்சுமணர்களை அவர் அன்புடன் வரவேற்றார். தன் தாய்க்கு சாபவிமோசனம் அளித்த
அந்த மகானை அவர் மிகவும் நேசித்தார். விஸ்வாமித்திரரிடம், முனிவரே! ஜனக
மகாராஜா மிகப் பெரிய வேள்வியை நடத்த இருக்கிறார். வேள்வி முடிந்தபிறகு
அவரது திருமகள் சீதைக்கு சுயம்வரம் நடத்தப்போகிறார். சுயம்வரத்திற்கு
வரும் மன்னர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அரண்மனையில் இருக்கும்
வில்லை நாணேற்றி யார் அம்பு எய்கிறார்களோ, அவருக்கே தன் மகள் சீதையை
திருமணம் செய்து கொடுப்பதாக சக்கரவர்த்தி முடிவு செய்துள்ளார். ராமன் இந்த
போட்டியில் நிச்சயமாக வெல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே அவரை
போட்டியில் கலந்து கொள்ள செய்யுங்கள், என்றார். விஸ்வாமித்திரரும்
சம்மதித்தார். இதன் பிறகு தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு மூவரும்
புறப்பட்டனர். நீலவண்ணமேனியன் ஒருவன் கருணை பொங்கும் கண்களுடனும், அழகு
பொங்கும் வதனத்துடனும் வருவதைக் கவனித்தன இரு அழகு விழிகள்.
தாயாரை விற்கலாமா
ஒரு நாள், தரிசனத்துக்கு வந்தவர்களிடமெல்லாம்
‘தாயாரை விற்கலாமா வயதாகிவிட்டால், தாயாரை விற்கலாமா?‘ என்று
கேட்டுக்கொண்டே இருந்தார்கள் பெரியவாள்.தொண்டர்களுக்கு
புரியவேயில்லை.தாயாரை-வயதான தாயாரை-ஏன் விற்கணும்? விற்றாலும் யார்
வாங்குவார்கள்? தாயாரை விற்றதாக
கேள்விப்பட்டதில்லையே’தாயாரை விற்க கூடாது‘ என்று எல்லோரும் ஒருமுகமாக
கூறினார்கள்.’அப்படி ஓர் அநியாயம் நம்ம தேசத்திலே நடந்துண்டு இருக்கு.எந்த
மாநிலத்தில் ஹிமாச்சல் பிரதேசத்திலாஅருணாச்சல் பிரதேசத்திலா நம்ம தமிழ்
நாட்டில் தான்…தினமும் நூற்றுக்கணக்கில் விற்பனை ஆகிறது. வாங்குகிறவன்
எங்கோ கொண்டு போய் விடுகிறான்…’பெரியவாள் இவ்வளவு வருத்தப்பட்டு பேசியதை,
ஆண்டாண்டு காலமாக உடனிருந்து பணி செய்யும் சீடர்கள் கேட்டதில்லை.‘கோமாதா,
கோமாதான்னு பூஜை செய்யறோம். குளிப்பாட்டறோம். குங்குமம் வெக்கறோம். பால்
கறந்து காப்பி சாப்பிடறோம் (ஈஸ்வரன் கோவிலுக்கு கொடுக்கறதில்லே), ஆனா,
வயசாகி போய் பால் மரத்து போச்சுன்னா, வீட்டில் வெச்சுக்கறதில்லே. கசாப்பு
கடைக்காரன் கிட்டே வித்துடறோம்…அநியாயம்…சகல தேவதா ஸ்வரூபமான பசுவை இப்படி
கொன்றால், பகவான் எப்படி நம்மை ரட்சிப்பார்? வசதிப்பட்டவர்கள் கோசாலை
வைத்து வயதான பசுக்களை சம்ரக்ஷிக்கணும்.’பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து
பொருள்கள் – பஞ்சகவ்யம் ஈஸ்வர பூஜைக்கு தேவையானவை.பசுக்களிடம் எல்லை இல்லாத
பாசம் பெரியவாளுக்கு… அவற்றை கண்டால், கோகுலத்து கண்ணனாகவே மாறி
விடுவார்கள்.
சனிக்கிழமை பிரதோஷம்
சனிக்கிழமை பிரதோஷம் அன்று திருவண்ணாமலையில் ஒரு தடவை கிரிவலம் சுற்றினால் 1825 தடவை சுற்றிய பலன் கிடைக்கும்
கலியுகத்தில் நமது கர்மவினைகளை நீக்கும் சக்தி அன்னதானத்திற்கும்,
மந்திரஜபத்திற்கும் மட்டுமே உண்டு என்பதை ஆன்மீக குரு திரு. சகஸ்ரவடுகர்
அவர்கள் கண்டறிந்துள்ளார்.அன்னதானம் பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது:
நாம் வசிக்கும் ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை
அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம்
காசிக்குச் சென்று ஒரே ஒரு நாள் மூன்று வேளைகளும் அன்னதானம் செய்தால்
கிடைத்துவிடும். காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம்
ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட
அதிகமான புண்ணியம் அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால்
கிடைத்துவிடும். நாம் பிறந்தது முதல் நமது இறுதிநாள் வரையிலும் ஒவ்வொரு
நாளும் காசியில் 1,00,00,000 பேர்களுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு
புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம்,துவாதசி திதி வரும் நாளில்
அண்ணாமலையில் மூன்று வேளைகளும் ஒருவருக்கு(காலையில் ஒருவர்,மதியம்
ஒருவர்,இரவில் ஒருவர்)அன்னதானம் செய்தால்
கிடைத்துவிடும்.மேலும்,மறுபிறவியில்லாத முக்தி துவாதசி அன்னதானம்
செய்வதாலேயே கிடைத்துவிடும்.இந்த பேருண்மையை சிவமஹாபுராணத்தில் வித்யாசார
சம்ஹிதை தெரிவிக்கிறது. துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வரும்
நாளில் நமது ஆன்மீக குருவின் தலையில் அன்னதானம் செய்தால் மேலே கூறிய
எண்ணிக்கையை விட ஆயிரம் மடங்கு புண்ணியம் நம்மை வந்து சேரும்.இதனால்,கடந்த
ஐந்து பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே
பிறந்திருக்கிறோம்;நமது அனைத்து கர்மவினைகளும் நம்மைவிட்டு முழுசாக நீங்கிட
இந்த சொர்ணாகர்ஷண கிரிவலம் ஒரு காரணமாக அமைந்துவிடும். ஒரே ஒரு
சனிப்பிரதோஷம் அன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால்,ஐந்து வருடங்களுக்கு(365
*5 = 1825 நாட்கள்) தினமும் கிரிவலம் சென்றதற்கான பலன்கள்
கிடைக்கும்;மேலும்,சனிப்பிரதோஷ நேரத்தில் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து
கொண்டு,பிரதோஷ நேரம் நிறைவடைந்த பின்னர் அண்ணாமலையாரை தரிசனம் செய்தால்
1825 நாட்களுக்கு தினமும் அண்ணாமலையாரை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும்
என்பதை சித்தர்களின் தலைவரான கும்பமுனி தனது பாடல்களில் தெரிவிக்கிறார்.
சுவாதி நட்சத்திரமும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வருவது பல ஆண்டுகளுக்கு
ஒருமுறையே வரும் ஓர் அற்புத நிகழ்வாகும்;அத்துடன் துவாதசி திதியும்
சேர்ந்து வருவது சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும்;அதையே சொர்ணாகர்ஷண
கிரிவலநாள் என்று அண்ணாமலை ஏடு தெரிவிக்கிறது.இந்த நன்னாளில் நமது
குருவுடன் கிரிவலம் செல்பவர்கள் பலத்த பூர்வபுண்ணியம் மிக்கவர்கள்
என்றும்,அவர்களின் கர்மவினைகள் மழையில் கரையும் உப்பைப் போல கரைந்து
காணாமல் போய்விடும் என்றும் விவரிக்கிறது. 30.11.2013 சனிக்கிழமை அன்று
துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும்,சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து
இப்பேர்ப்பட்ட பெருமைகளுடன் வர இருக்கிறது.இந்த நன்னாளில்,காலை 7 மணிக்கு
ஆன்மீககுரு சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் இரட்டைப்பிள்ளையார் கோவிலில்
சொர்ணாகர்ஷண கிரிவலப் பயணம் புறப்படுகிறது. பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை
அணிந்திருப்பது அவசியம்;அவ்வாறு புறப்படும்போது,ஐந்து கிலோ
நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும்,அன்னதானத்தின் நவீன
வடிவமாகிய இட்லிகள் நிரம்பிய பார்சல்களை உடன் கொண்டு செல்லவேண்டும்
கிரிவலப் பயணத்தின் போது ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம்
அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்துக் கொண்டே செல்வோம்;ஏனெனில்,ஒரே ஒருமுறை ஓம்
அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்தாலே
3,00,000 தடவை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தமைக்கான பலன்கள் கிட்டும் என்று
அண்ணாமலையாரே உபதேசித்திருக்கிறார்.எனவே,இதைத்தவிர,வேறு எந்த வீண்பேச்சும்
பேசாமல் கிரிவலம் செல்வோம்;கிரிவலப்பயணத்தின் போது இட்லி தானம்
செய்வோம்;நாம் கொண்டு செல்லும் ஐந்து கிலோ நவதானியங்களையும் நமது கைகளால்
கிரிவலப்பாதையின் ஓரங்களில் தூவுவோம்;தற்போது மழைக்காலமாக இருப்பதால்
நம்மால் தூவப்பட்ட நவதானியங்கள் விரைவில் செடிகளாக வளரத் துவங்கும்;அவ்வாறு
வளரத்துவங்கியதும்,நமது அனைத்து கிரக தோஷங்களும் நம்மை விட்டு
நீங்கிவிடும்; நாம் கொண்டு வரும் டயமண்டு கல்கண்டுகளை கிரிவலப் பாதையில்
தூவுவோம்;ஒரே ஒரு டயமண்டு கல்கண்டை ஒரே ஒரு எறும்பு எடுத்துச் சென்றாலே
நாம் நூறு அந்தணர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு அன்னதானம்
செய்த பலன் நமக்குக் கிட்டும்;இதனால்,சனியின் தாக்கம் நம்மை விட்டு
முழுமையாக நீங்கிவிடும் என்பது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின்
ஆன்மீக ஆராய்ச்சி முடிவு! மதியம் 2 மணிக்குள் கிரிவலம் நிறைவடைந்த
பின்னர்,மாலையில் நடைபெற இருக்கும் சனிப்பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து
கொள்வோம்;இரவு பள்ளியறை பூஜை வரையிலும் அண்ணாமலையாரின் ஆலயத்தினுள்
இருந்தாலே நமது நியாயமான கோரிக்கைகளும்,வேண்டுதல்களும் நிறைவேறத்
துவங்கும்;பல ஆண்டுகளாக நமக்கு இருந்துவரும் கர்மவினைகளும்,சிரமங்களும்
முழுமையாக விலகிவிடும்.பள்ளியறை பூஜை நிறைவடைந்ததுமே நேராக (வேறு எந்த கோவி
ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும்,
ஒரு
காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை
வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து
போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை
வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி. அதில், கார்த்திகை அஷ்டமி
மிகவும் உயர்ந்தது.
அபிதான சிந்தாமணி என்ற நூலில், பைரவர் வரலாறு கூறப்பட்டுள்ளது.
தாருகாசுரன் என்பவன், இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான்.
உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி
அவனிடம் கூறினார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும்
அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன
செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.
பல அட்டூழியங்கள் செய்த
அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர்.
பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு
சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்’
(விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, "காளி’ என பெயர் சூட்டினாள்.
காளிதேவி
கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த
கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு
குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான்,
காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார்.
அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு
குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு,
"பைரவர்’ என்று பெயர் வைத்தார். காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு
சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, "காளபைரவர்’
எனப்பட்டு தற்போது, "காலபைரவர்’ ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி
நியமித்தனர்.
தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற
வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர்
நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல
வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர். இதுபோல், வாழ்க்கையில் இன்ப துன்பம்
எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என, வேதங்கள்
சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக, நாய் வாகனம் கருதப்படுகிறது.
நாய்க்கு, "வேதஞாளி’ என்ற பெயர் இருக்கிறது.
பைரவரை தினசரி
வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம்
அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால்தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி
கொடுத்துள்ளனர். சித்திரை: ஸ்நாதனாஷ்டமி, வைகாசி: சதாசிவாஷ்டமி, ஆனி:
பகவதாஷ்டமி, ஆடி: நீலகண்டாஷ்டமி, ஆவணி: ஸ்தாணு அஷ்டமி, புரட்டாசி:
சம்புகாஷ்டமி, ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி. கார்த்திகை: கால பைரவாஷ்டமி,
மார்கழி: சங்கராஷ்டமி, தை: தேவதாஷ்டமி, மாசி: மகேஸ்வராஷ்டமி, பங்குனி:
திரியம்பகாஷ்டமி. இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச்
சிறப்புக்கள் உள்ளன.
நவக்கிரக பைரவர்
பைரவ பெருமான்,
ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில்
வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே
உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம். மேஷ ராசி
தலையிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும்,
சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும்,
லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும்,
காலின்கீழே கும்பமும், அடித்தளங்கில் மீன ராசியும் உள்ளதாக சாஸ்திர, ஜோதிட
நூல்கள் தெரிவிக்கின்றன.
அஷ்டமி செவ்வாய்
தேய்பிறை
அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம்
பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில்
மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும்.
தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும்.
செவ்வாடை சாற்றி, சிகப்பு
அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன்,
பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி
அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.
தேங்காய் மூடி விளக்கு
ஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால்
அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும். அந்த கண் பக்கம் இருக்கும்
மூடியில் ஐந்துவிதமான எண்ணெய். அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய்,
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு விளக்கேற்ற
சனி தோஷங்கள், 7அரை சனி, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும். போட்டி, பொறாமை,
வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட
சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம். நாளை வெள்ளிக்கிழமை
தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை
வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும். மேலும் நாளை திருவாதிரை
நட்சத்திரத்துடன் வருவதால் கூடுதல் சிறப்பாகும்.
பைரவ காயத்ரி மந்திரம்
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.
பைரவரை மூலவராகக் கொண்ட கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் உள்ளது. இங்குள்ள பைரவர் முன், ஒரு யந்திரம் உள்ளது. இவர் மிகவும்
சக்தி வாய்ந்தவர். இங்கு பைரவாஷ்டமி விழா சிறப்பாக நடக்கும். தஞ்சாவூரில்
இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் வழியில், வாயுமேடு
கிராமம் இருக்கிறது. இங்கிருந்து பிரியும் ரோட்டில், 2 கி.மீ., சென்றால்,
தகட்டூரை அடையலாம்.
கேரளாவிலுள்ள வைக்கம் மகாதேவர் கோவிலில்,
கார்த்திகை தேய்பிறை அஷ்டமியை மகாதேவ வாஷ்டமி என்ற பெயரில் விமரிசையாக
நிகழ்த்துவர். அந்த நாளில், இங்கு அன்னதானம் செய்தால் பெரும் புண்ணியம்
கிடைக்கும். இப்போதே பதிவு செய்தால், சில ஆண்டுகளுக்குப் பின் தானம் செய்ய
அனுமதி வழங்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மொட்டைக்கோபுரம்
அருகில் உள்ள பைரவர் சக்தி வாய்ந்தவர். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி
திருநோக்கிய அழகியநாதர் கோவிலில் உள்ள பைரவர், இரட்டை நாய்களுடன் காவல்
செய்கிறார்.
பைரவருக்கு வடை மாலை, எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம்.
கஷ்டங்கள் தீவிரமாகும் போது, காவல் தெய்வமான பைரவரை வணங்குங்கள். அவை
காற்றில் பறக்கும் பஞ்சாகி விடும்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:
1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்
2.சென்னை அருகே இருக்கும் வானகரம்
3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில்
இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும் திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண
ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது.
4.சென்னையில் இருக்கும்
ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில்
இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.
5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி(காஞ்சிபுரத்திலிருந்து
ஆட்டோவில் 25 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்.அடிக்கடி பேருந்து வசதி
இல்லை;குண்டும் குழியுமான சாலை வசதி இருக்கிறது.ஆனால்,பழமையான ஸ்ரீசொர்ண
பைரவர் ஆவார்)
6.சிதம்பரம் கோவில்
7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்
8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல)
செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர்
வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்
கோவில் இதுதான்!!!)
9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை
10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில்
11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)
12.பிள்ளையார்பட்டி அருகிலிருக்கும் வயிரவன்பட்டி
13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில்
இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண
பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.ஒவ்வொரு தேய்பிறை
அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள்
நடைபெற்றுவருகின்றன.
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி,
ரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில்,
ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,
நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6.
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் திருக்கோவில்,
ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்
வழித்தடம்:கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம்
இறங்கவும்.அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்.நடந்து செல்வது கடினம்.
(பூசாரி செல் எண்:92451 69455)
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில், பாண்டிச்சேரி.
நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்
வழித்தடம்:பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும்
சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இந்த
நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ண
பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார்.எனவே,இங்கே
வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது.
17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில்
அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர்
சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்.
18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில், பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்-1.
20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(
பஸ் ரூட்: பாகாயம் டூ காட்பாடி பேருந்துகள் எண்கள்:1,2 எனில் கல்யாண
மண்டபம் பஸ் நிறுத்தம்; 1G, 2G எனில் காங்கேயநல்லூர்
ஸ்டாப்=ஆர்ச் அருகே இறங்கி நடந்து வரவேண்டும்) 21.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண
ஆகர்ஷண பைரவர் சன்னதி,மத்ய கைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய் நகர் ரயில்வே
ஸ்டேஷன்,அடையார்,சென்னை-20(பேருந்து நிறுத்தம்:மத்திய கைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவில்,வாலாஜாபேட்டை.
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்
24.சென்னையில்,செட்டியார் அகரம் என்னும் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர்
ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத் தெருவில் இருக்கும் முருகன்
கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் இருக்கிறார்.
செல் (கோயம்பேடு பகுதி மக்களுக்கு இந்த கோவில் மிக அருகில்
இருக்கிறது)
***தமிழ்நாட்டின் தெற்கே திண்டுக்கல் தாடிக்கொம்பு
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்
சன்னதி இருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவராக இவர்
அருள் பாலித்து வருகிறார்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்கு வந்து மனதார நமக்குத் தேவையான நியாயமான கோரிக்கைகளை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்;
திருமண்ணும் திருநீறும்
திருமண்ணும் திருநீறும் சொல்லும் தத்துவம் ஒன்றுதான்..!
தமிழில் பல அருமையான சிற்றிலக்கிய வகைகள் உண்டு. அவற்றுள் ஒன்று, குறம்.
ஒருவருடைய கையையோ, உடலையோ, முகத்தையோ பார்த்து, அவர்களுடைய எதிர்காலத்தில்
என்ன நடக்கும் என்று கணித்துச் சொல்லுவது, அதாவது, குறி சொல்லுவதுதான்
‘குறம்’ என்று அழைக்கப்படுகிறது.குறிப்பாக, இறைவனை மணக்கவிருக்கும்ஒரு
பெண்னைச் சந்திக்கும் ஒரு குறத்தி அந்த இறைவனின் பெருமைகளைப் பாடி,
‘இப்படிப்பட்ட கண வன் உனக்கு வருவான்’ என்று சொல்லி அவளை மகிழச் செய்வாள்,
இந்த வகையில் அமைந்த சுவாரஸ்யமான கதைப் பாடல் இலக்கியங்கள் ஏராளம்.
இதற்குச் சிறந்த உதாரணம், குமர குருபரர் எழுதிய ‘மீனாட்சியம்மை குறம்’.
மதுரை மீனாட்சிக்கு மாப்பிள்ளையாக, சுந்தரேஸ்வரர் வரவிருக்கி றார். அதைப்
பற்றி மீனாட்சியம்மைக்கு எடுத்துச் சொல்கிறாள் குறத்தி. இந்தக் குறத்தி
பிறந்து வளர்ந்ததெல்லாம்பொதிகை மலையில். ஊர்ப் பெருமை எல்லாருக்கும்
இருக்கும்தானே? குறி சொல்வதற்கு முன்னால், அவள் தங்களுடைய மலையின் பெருமையை
விவரிப்பதாகக் குமரகுருபரர் எழுதியிருக்கும்ஓர் அருமையான பாடல்:
சிங்கமும் வெம் களிறும் உடன் விளையாடும் ஒருபால்,
சினப் புலியும் மடப் பிணையும் திளைத்திடும் அங்கு ஒருபால்,
வெம் கரடி மரயினொடும் விளையாடும் ஒருபால்,
விட அரவும் மட மயிலும் விருந்து அயரும் ஒருபால்,
அங்கண் அமர் நிலம் கவிக்கும் வெண் கவிகை நிழல்கீழ்
அம் பொன் முடி சூடும் எங்கள் அபிடேகவல்லி
செம் கமலப் பாதம் பரவும் கும்ப முனி பயிலும்
தென் பொதிய மலை காண் மற்று எங்கள் மலை அம்மே!
அம்மையே, பொதுவாக, சிங்கமும் யானையும் ஒன்றுக்கொன்று விரோதிகள், புலியைப்
பார்த்தால் மான் பயந்து ஓடும், கரடியைப் பார்த்தால் மரை என்கிற ஒரு வகை
மான் நடுங்கும், பாம்பும் மயிலும் எப்போதும் சண்டையிடுகிறவை.ஆனால்,
எங்களுடைய பொதிகை மலையில் மட்டும் இந்த விரோதங்களுக்கு இடமே இல்லை! அங்கே
ஒருபக்கம் சிங்கமும் யானையும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும். இன்னொரு
பக்கம் புலியும் மானும் ஆனந்தமாகத் திளைத்து ஆடும். வேறொரு பக்கம் கரடியும்
மரையும் ஒன்றாக ஆட்டம் போடும். விஷப் பாம்பும் மயிலும் ஒன்றாக விருந்து
சாப்பிட்டு விட்டுக் களைத்து அமர்ந்திருக்கும்!
இப்படி மிகத் தீவிரமான
எதிரிகளைக்கூட, நண்பர்களாக மாற்றிவிடுகிற சிறப்பைக் கொண்டது எங்களுடைய
பொதிகை மலை. ஏன் தெரியுமா? உலகையெல்லாம் காக்கும் வெண்கொற்றக்
குடையின்கீழ், அழகிய தங்கக் கிரீடத்தைச் சூடிய அபிஷேகவல்லி இங்கே
எழுந்தருளியிருக்கிறாள். சிவந்த தாமரை மலர்களைப்போன்ற அவளுடைய பாதம் பட்ட
இந்த மலையில், அன்பைத் தவிர வேறெதற்கும் இடம் இல்லை, எல்லாரும்
எல்லாருக்கும் நண்பர்கள்தான், எல்லாரும் உறவினர்கள்தான்!
அது
மட்டுமில்லை, கும்பத்திலிருந்து பிறந்த, ‘கும்ப முனி’ என்று அழைக்கப்படுகிற
அகத்திய முனிவரும் இந்தப் பொதிகை மலையில்தான் வாழ்ந் தார். தமிழ் வளர்த்த
அந்தப் பெருமானின் ஆசிகளும், எங்களை என்றைக்கும் மகிழ்ச்சியாகவே
வாழவைக்கின்றன! இப்படிப்பட்ட சிறப்பைக் கொண்ட தென்பொதிகை மலையிலிருந்து
வந்திருக்கும் நான், உன்னுடைய எதிர்காலத்தைப்பற்றிச் சொல்கிறேன் கேட்பாயாக!
எல்லா மதங்களும் எல்லாக் கடவுளர்களும் அன்பைதான் போதிக்கிறார்கள். ஆனால்,
பக்தர்களுக்கிடையே கருத்து வேறுபாடு எப்போதும் உண்டு இதற்குச் சிறந்த
உதாரணம், சைவம், வைணவம் ஆகியவற்றை இருவேறுபட்ட அம்சங்களாக
எடுத்துக்கொண்டுபிடிவாதமாகச் சண்டை போடுகிறவர்கள்தான்.
நமக்குத்
தெரிந்து சிவனை வணங்க மாட்டேன் என்று சொல்லும் வைணவர்கள் பலர் உண்டு.
திருமால் ஆலயங்களைப் புறக்கணிக்கும் சிவ பக்தர் களும் உண்டு. இந்தப்
பாகுபாட்டைக் கேலி செய்யும்விதமாக,‘அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர்
வாயிலே மண்ணு’ என்று ஒரு சொலவடைகூட இருக்கிறது. சிவனும் திருமாலும்
சேர்ந்து தோன்றும் பல கதைகள் உள்ளன, கடவுள் தன்னுடைய பக்தர்களில் பேதம்
பார்ப்பதில்லை என்று பல பெரியவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்,
சைவக் கோயில்கள் பலவற்றில் பெருமாளும் வைணவக் கோயில்களில் சிவனும்
எழுந்தருளியிருக்கிறார்கள், ஆனால், எத்தனை பேர் இதை மனத்தளவில்
ஏற்றுக்கொள்கிறார்கள்?
இதுகுறித்து, கவிஞர் வாலி தன்னுடைய சமீபத்திய
நூல் ஒன்றில் இப்படி எழுதுகிறார்: ‘ஆனை துரத்தினும் ஆனைக்கா புகேன்’ என்று
சொல்லும் வைணவர்கள் வழி வந்த நான், சின்ன வயதில் இருந்தே சைவர் வழிபடும்
அம்பிகையிடமும் ஆறுமுகனிடமும் அடைக்கலமானேன். அசல் ஐயங்கார் குடும்பத்தில்
பிறந்த நான், முருகன் விபூதியையும் அம்மன் குங்குமத் தையும்தான் இன்றும்
நெற்றியில் இட்டுக்கொள்கிறேன். திருமண்ணும் திருநீறும் ஒரே தத்துவத்தைதான்
சொல்கின்றன!’ சொலவடைத் தமிழில் பாமரர்களும் உரைநடைத் தமிழில் வாலியும்
எழுதிய இதே விஷயத்தை, அன்றைக்குக் கவிதைத் தமிழில் ஓர் ஆழ்வாரும்
சொல்லியிருக்கிறார், தெரியுமா?
சில புத்தகங்களை ‘டூ இன் ஒன்’
வடிவத்தில் வெளியிடுவார்கள். முதல் பக்கத்திலிருந்து படித்தால் ஒரு கதை,
அப்படியே திருப்பிக் கடைசிப் பக்கத் திலிருந்து படித்தால் இன்னொரு கதை.
வாசகருக்கு ஒரே புத்தகத்தில் இரண்டு புத்தகங்களைப் படித்த திருப்தி
கிடைக்கும்.அந்தவிதத்தில், பொய்கையாழ்வார் அருளிச்செய்த இந்தப் பாடலும் ‘டூ
இன் ஒன்’தான். ஒரே பாடலில் சிவன், திருமால் என இரண்டு கடவுள்களின் புகழ்
பாடப்படுகிறது, அதோடு ‘த்ரீ இன் ஒன்’னாக, அவர்கள் இருவரும் ஒன்றே எனும்
தத்துவமும் விளக்கப்படுகிறது.
‘அரன், நாரணன் நாமம்; ஆன்விடை, புள் ஊர்தி;
உரை நூல், மறை; உறையும் கோயில் வரை,நீர்;
கருமம் அழிப்பு, அளிப்பு; கையது வேல், நேமி;
உருவம் எரி, கார்; மேனி ஒன்று.’
முதலில், இரு கடவுள்களின் பெயர்கள்:
சிவனுக்கு அரன், திருமாலுக்கு நாரணன்.
அடுத்து, அவர்களுடைய வாகனங்கள்,
சிவனுக்கு எருது, திருமாலுக்குப் புள் / பறவை, அதாவது, கருடன். அவர்கள்
இருவரும் நமக்காக உரைத்தவை, சிவன் தந்தது ஆகம நூல், திருமால் அருளியது மறை
நூல். அவர்கள் இருவரும் வாழுகின்ற இடங்கள், சிவன் வாழ்வது வரை /மலை,
அதாவது, கயிலாயம். திருமால் வாழ்வது நீர், அதாவது பாற்கடல். அவர்கள்
இருவருடைய வேலை? சிவனுடைய வேலை அழிப்பது, திருமாலுடைய வேலை காப்பது.
அவர்கள் கையில் என்ன இருக்கும்? சிவன் கையில் வேல் இருக்கும். திருமால்
கையில் சக்கரம் இருக்கும். அவர்களுடைய உருவம் எப்படிப்பட்டது? சிவனுடைய
உருவம் எரி, அதாவது, நெருப்பு வடிவானது. திருமாலின் உருவம் கார். அதாவது,
மேகத்தைப் போன்றது.
இப்படிப் பெயர், வாகனம், உரை, வாழும் இடம், வேலை,
ஆயுதம், உருவம் என்று பல விதங்களில் இவர்கள் வேறுபட்டாலும், அவர்களுடைய
மேனி ஒன்றுதான். அவர்களை இருவேறாகப் பேதம் பார்க்காதீர்கள். ஒருவரைப்
புறக்கணித்து இன்னொருவரை வணங்குவதுதான் உயர்வு என்று நினைக்காதீர்கள்! ஊர்
சிதம்பரம், மாதம் மார்கழி, திருவாதிரைத் திருவிழா, நடராஜரின் தேர் வலம்.
இறைவனின் திருக்கோலத்தைப்பார்ப்பதற்காக ஊரே திரண்டிருந்தபோது, ஒரு பிரச்னை,
நடராஜர் எழுந்தருளியிருந்த தேர் நகர மறுத்தது. பக்தர்கள் பதறிப்போனார்கள்,
ஏதேனும் தெய்வ குற்றமாகிவிட்டதா? பூஜையில் தவறா? தேரை இழுத்தவர்கள்
சரியில்லையா? இப்போது என்ன செய்வது?
யார் யாரோ இழுத்துப் பார்த்தும்
அந்தத் தேர் அரை அடிகூட நகரவில்லை. மக்கள் ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்தபடி திகைத்து நின்றார்கள். அப்போது, வானிலிருந்து ஓர் அசரீரி
கேட்டது, ‘‘சேந்தா, தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக!’’ ‘‘சேந்தா’’ என்று
இறைவனால் உரிமையோடு அழைக்கப்பட்டவருடைய முழுப் பெயர் சேந்தனார். பெரும்
பக்தர், அருமையான புலவரும்கூட. நடராஜரே கேட்டபிறகு மறுக்கமுடியுமா?‘‘மன்னுக
தில்லை, வளர்க நம் பக்தர்கள்’’ என்று தொடங்கி, அற்புதத் தமிழில் ‘திருப்
பல்லாண்டு’ பாடினார், சேந்தனார். மறுகணம், அந்தத் தேர் நகரத் தொடங்கியது.
யாரும் வடம் பிடித்து இழுக்காமலே ஊரை வலம் வந்து தன்னுடைய இருப்பிடம்
சேர்ந்தது. சேந்தனார் பாடிய ‘திருப் பல்லாண்டு’ இன்றைக்கும் சைவத்
திருமுறைகளில் ஒன்றாக வைத்துப் போற்றப்படுகிறது, அற்புதமான பாடல்களைக்
கொண்ட இந்தச் சிறு நூலின் முதல் பாடல், நகராத தேரை நகர்த்துவதற்காகஆண்டவனே
கேட்டுப் பெற்றது:
மன்னுக தில்லை, வளர்க நம் பக்தர்கள்,
வஞ்சகர் போய் அகல,
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து,
புவனி எல்லாம் விளங்க,
அன்ன நடை மடவாள் உமை கோன்,
அடியோமுக்கு அருள் புரிந்து,
பின்னைப் பிறவி அறுக்க நெறி தந்த பித்தர்க்குப்
பல்லாண்டு கூறுதுமே!
‘பல்லாண்டு’ என்றால், ஒருவரைப் ‘பல ஆண்டுகள் நிறைவாகவும்
ஆரோக்கியமாகவும்வாழ்க’ என்று வாழ்த்துவதைக் குறிப்பிடும் சொல். வைண வத்தில்
இது மிகவும் பிரபலமான ஒரு பாடல் முறை. உதாரணமாக, பெரியாழ்வார் அருளிச்
செய்த இந்த வரிகள்:
பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு,
பல கோடி நூறாயிரம்,
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா, உன்
சேவடிச் செவ்வித் திருக்காப்பு.
இறைவா, நீ பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்க! பல கோடி
நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க! மல்லர்களை அடக்கிய பல மான தோள்களை உடைய
மணிவண்ணா, உன் சிவந்த திருவடியின் அழகு என்றைக்கும் குறைவில்லாதபடி
காப்பாற்றப்படட்டும்! கொஞ்சம் பொறுங்கள், எங்கேயோ இடிக்கிறது! வழக்கமாக
எல்லாரும் இறைவன் முன்னால் வணங்கி நின்று நீண்ட வாழ்வுக்காக வேண்டுவார்கள்.
ஆனால், இங்கே சேந்தனாரும் பெரியாழ்வாரும் இறைவனையே ‘பல ஆண்டுகள் வாழ்க’
என்று வாழ்த்துகிறார்களே. இது சரியா? இறைவனுடைய பிள்ளைகளாகிய நாம், அவனை
வாழ்த்தலாமா? தப்பில்லையோ?
பக்தியின் முதிர்ச்சி நிலைகளில் ஒன்றுதான்
இது. கடவுள்மேல் அளவற்ற பாசம் ஏற்பட்டுவிட்டால், இந்த உலகத்தில் அவருக்கு
ஏதேனும் தீங்கு நேர்ந்துவிடுமோ என்கிற அச்சம் (அர்த்தமற்றதாக இருப்பினும்)
ஏற்படுகிறது, அப்படி எதுவும் நடக்காமல் அவர் பல்லாண்டு வாழட்டும் என்று
உருகிப் பாடத் தோன்றுகிறது! சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டில், இறைவனை
மட்டுமல்ல, அவன் எழுந்தருளியிருக்கும் சிதம்பரம், அங்குள்ள
பக்தர்களையெல்லாம்கூட வாழ்த்துகிறார்.‘நமக்கு எதிராக வஞ்சகம் செய்கிறவர்கள்
இங்கிருந்து நீங்கட்டும்’ என்கிறார். சிதம்பரம் கோயிலுக்குத் தங்கத்தால்
செய்த கூரை உண்டு. அதைக் குறிப்பிடும்வகையில், ‘பொன்னால் செய்த மண்டபத்தில்
புகுந்து, எல்லா உலகங்களும் விளங்க அருள் புரிபவன்’ என்று சிவபெருமானைப்
போற்றுகிறார் சேந்தனார். ‘அன்னம் போல் நடக்கும் உமையம்மையின் தலைவன்,
பித்தன் என்று போற்றப்படும் அந்த இறைவன், எம்மைப்போன்ற அடியார்களுக்கு
அருள் புரியவேண்டும், எங்களுடைய பிறவிப் பிணியை அகற்றவேண்டும்.’
இதெல்லாம் இன்றைக்கு, நாளைக்கு அல்ல, என்றென்றும் தொடர்ந்து நடக்கவேண்டும்,
அதற்காக, நாம் அந்த இறைவனை வாழ்த்திப் பல்லாண்டு பாடுவோம்! அவன்
வாழ்ந்தால், உண்மையில் வாழப்போவது நாம்தானே!
பக்தனுக்காகத் தன்னையே
பக்தனுக்காகத் தன்னையே குறுக்கிக்கொண்டபரந்தாமன்!
பாற்கடலில் திருமாலின் பஞ்சணையாக ஆதிசேஷன் விளங்குகிறான். பல்வேறு
காரணங்களுக்காக பெருமாள் தாம் பூலோகத்தின் பல தலங்களில் அர்ச்சாவதாரம்
கொண்டிருக்கிறார். எப்போதும் திருமாலுடனேயே, அவர் அர்ச்சாவதாரமாக எங்கே
திகழ்ந்தாலும் அங்கெல்லாமும் தானும் உடனிருக்க வேண்டும் என்ற ஏக்கம்
அவனுக்கு. அவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்ய திருமால் ஒரு சூழ்நிலையை
உருவாக்கித் தந்தார். அதன்படி, கருடனுக்கும் ஆதிசேஷ னுக்கும் இடையே மெலிதான
ஒரு பகைமை தோன்றியது. தான் வெறும் படுக்கையாக மட்டுமே அமைந்து
பெருமாளுக்கு சேவை செய்ய, கருடனோ, அவரை அவர் வி ரும்பும் இடங்களுக்கெல்லாம்
சுமந்து சென்று அந்தந்தத் தலங்களிலுள்ள பக்தர்களின் அபிமானத்தைப் பெற்று
வந்து விடுகிறான்.
தான் பாற்கடலை விட்டுத் தாண்ட இயலாத பொறுப்பில்
இருக்க, கருடனோ, மஹாவிஷ்ணு சஞ்சரிக்கும் இடத்துக்கெல்லாம் தானும் அவரை
சுமந்து சென்று புகழ் பெற் றுவிடுகிறான். இத்தனைக்கும் ஏதேனும் பொறுப்பை
நிறைவேற்றிவிட்டு வரும் திருமாலின் சோர்வை நீக்க, தான் மிருதுவான
படுக்கையாகக் காத்திருப் பதில் ஆதிசேஷனுக்குப் பெருமைதான். ஆனால், அது
உலகோர் எத்தனை பேருக்குத் தெரியும்? தானும் கருடனைப் போலவே, திருமாலுடன்
எப்போதும் உடனிருப்பவன்தான் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்;
அப்புறம், ஈரேழுலகத்தோர் அனைவரும் தனக்கும் கருடனுக்கு சம முக்கியத்துவம்
தருவார்கள்; தானும் திருமால் அர்ச்சாவதாரம் மேற்கொள்ளும் எ ல்லா
தலங்களிலும் ‘நின்றால் குடையாகி, அமர்ந்தால் சிம்மாசனமாகி, படுத்தால்
மஞ்சமாகி’ சேவை புரிய நேர்ந்தால், தனக்கும் அதே மதிப்பும் மரி யாதையும்
வழங்கப்படும் என்று ஊகித்தான். அதற்காகவே கருடனுடன் கோபம் கொண்டான்.
தனக்குச் சமமாக அந்தஸ்து பெற நினைக்கும் ஆதிசேஷன் மீது அடங்கா கோபம்
விளைந்தது கருடனுக்கு. ‘வெறும் படுக்கை இவன்; இவன் என்ன முக்கியத்துவம்
பெறுவது!’ என்ற அகங்காரக் கோபம். ஊர்ந்து செல்லும் அவனை, பறந்து பறந்து
தாக்க முற்பட்டான்.
அந்தத் தாக்குதலுக்கு ஈடுகொ டுக்க முடியாத ஆதிசேஷன்
பல இடங்களுக்கு ஓடி தப்பிக்க முயன்றான். ஒரு கட்டத்தில் இந்தச்
சிறுபுலியூர் தலத்துக்கு வந்தான். இங்குள்ள தீர்த்தக்க ரையில் திருமாலை
எண்ணிக் கடுந்தவம் மேற்கொண்டான். தன்னோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன்
இப்படித் தவித்து மருகுவது கண்டு அவன் மீது இரக்கம் கொண்டார் திருமால்.
அவன்முன் பால மூர்த்தியாகத் தன்னைக் குறுக்கிக்கொண்டு காட்சியளித்தார்.
அவனுக்கு அபய
மளித்தார். கருடனைக் கண்டித்தார். அவரவர் பொறுப்பு
அவரவருக்கு. அததற்கென்று தனித்தனியாக பெருமை உண்டு. இதில் ஒருவரைப்
பார்த்து மற் றவர் அசூயைப் பட வேண்டிய அவசியமில்லை என்று இருவருக்கும்
அறிவுறுத்தினார்.
இந்த ஊருக்கு இப்படி ஒரு பெயர் அமைந்ததற்கு சிவ
பக்தர் ஒருவரே காரணம். அவர் ஒரு முனிவர். மத்தியந்தன முனிவரின் மகன்.
சிறுவயது முதலே சிதம்பரம் நடராஜப் பெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்.
பூச்சொரியும் மரங்களின் மேலே ஏறவேண்டிய அளவுக்கு ஆழ்ந்த பக்தி கொண் டவர்.
ஆமாம், தினமும் நடராஜருக்கு மலர் சாத்தி மகிழ்ந்த இந்த அடியவர், அவ்வாறு
தான் சமர்ப்பிக்கும் மலர்கள் முற்றிலும் தூய்மையானவையாக இருக்க வேண்டும்
என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அதற்காக வெள்ளி முளைக்கு முன்னாலேயே
முகிழ்த்திருக்கும் மலர்களைக் கொய்ய மரங்களின் மீது ஏறுவார்.
அதாவது,
பொழுது புலர்ந்து தேனீக்கள் அந்த மலர்களை நாடி வந்து தேனைப் பருகிடும்
முன்னர் அந்தப் பூக்களைப் பறித் துவிடுவார் அவர். இதற்காகவே மரம் ஏற
வசதியாக, சிவபெருமான் அருளால் புலி நகங்கள் கொண்ட கால்கள் கைகளையும்
இருளிலும் எளிதாகப் பார்க்கவல்ல புலிக் கண்களும் பெற்றவர். இதனாலேயே இவர்
வியாக்ர பாதர் - புலிக்கால் முனிவர் என்றானார். தன் இறைத் தொண்டின் நிறைவான
பயனாகத் தனக்கு முக்தியளிக்க வேண்டும் என்று நடராஜப் பெருமானிடம் வருந்தி
வேண்டிக் கொண்டார் முனிவர். ஆனால், நடராஜர், அருமா கடலமுதப் பெருமாளை
தரிசித்தாலேயே அந்தப் பேறு அவருக்குக் கிட்டும் என்று அறிவுறுத்தினார்.
அதன்படி இந்தத் தலத்துக்கு வந்தார் புலிக்கால் முனிவர்.
இவருக்கு,
இந்தத் தலத்தில் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளித்து, பெருமாளையும்
அடையாளம் காட் டினார். இந்த முனிவரின் வருகையைப் பதிவு செய்யும் வகையில்
இந்தத் தலம் சிறுபுலியூர் என்றழைக்கப்பட்டது. அதோடு பெருமாள் கோயிலுக்கு
எதி ரில் ஒரு சிவலிங்கம் இன்றளவும் இந்தச் சம்பவத்துக்கு சாட்சியாக
அமைந்திருக்கிறது. தன் விருப்பம்போல பெருமாளின் அருளால் முக்தி அடையப்
பெற்றார் வியாக்ரபாதர். பொதுவாகவே பெருமாளின் சயனக் கோலத்தை மூன்றாக
வகைப்படுத்திப் பேசுவார்கள். ஒன்று தல சயனம், இரண்டு வட சயனம், மூன்று ஜல
சயனம். தல சயனம் என்றால், வெறுமே தரையில் பெருமாள் படுத்திருக்கும்கோலம்.
இந்தத் திருக்கோலத்தை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்காணலாம்.
வட
சயனம் என்றால் ஆலிலை மீது பெருமாள் படுத்திருக்கும்கோலம். இந்தக் கோலத்தை
ஸ்ரீவில்லிபுத்தூரில் நாம் தரிசிக்க முடியும். வடம் என்றால் ஆலமரம். வட
பத்ரம் என்றால் ஆலிலை. இந்த வடபத்ரத்தில் சயனித்திருப்பவர்தான் வடபத்ர சாயி
(சயனன்). ஜலசயனத் திருக்கோ லத்தை பெருமாள் கொண்டிருப்பது இந்த
திருச்சிறுபுலியூரில்தான். அதாவது, பாற்கடலில் மிதக்கும் ஆதிசேஷன் மீது
பள்ளிகொண்டிருக்கும் கோலம். மூலவருக்கு அருமா கடல் அமுதன் என்று பெயர்.
உற்சவர், கிருபா சமுத்திரப் பெருமாள் என்று வணங்கப்படுகிறார். உயர்ந்த
ஏழுநிலை ராஜகோபுர த்தினுள் நுழையும்போது பெருமாளும் பிரமாண்ட தோற்றம்
கொண்டிருப்பார் என்று நினைத்து அவரை தரிசித்தால் வியப்பு விழிகளையும்
மனதையும் கவ்வும்.
ஆமாம், மிகச் சிறிய வடிவினராக, பாலசயனராகக்
காட்சியளிக்கிறார் பெருமாள். இந்தத் தோற்றமும் தன்னை நாடிவந்து பணிந்த
புலிக்கால் முனிவருக்காகத்தான். சிவபெரு மான் யோசனைப்படி, தவமியற்றி
பெருமாள் தரிசனமும் கண்டபோது அந்த பிரமாண்ட தோற்றம் பார்த்து விக்கித்துப்
போனார் முனிவர். இரண்டு கண்களுக்குள்ளும் விரித்த இரு கரங்களுக்குள்ளும்
அடங்காத அந்தப் பரம்பொருளை எப்படி முழுமையாகக் கண்களால் காண முடியும்,
எப்படி கரங்களால் தீண்டி இன்புற முடியும் என்று திகைத்துப் போனார் அவர்.
ஆமாம், திருவனந்தபுரம் திவ்ய தேசத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை
மூன்று வாசல்கள் வழியாக, தனித்தனியாக சிரம், நாபி, பாதம் என்று
தரிசிப்பதுபோல நெடிய தோற்றம்! அவருடைய தர்மசங்கடத்தைப்பார்த்த பெருமாள்
அவருக்கு அருள் வழங்கும் வண்ணம் தன்னை அப்படியே சுருக்கிக் கொண்டார்.
புலியாருக்காக இப்படி சிறுவடி வினனாகப் பெருமாள் மாறியதாலும் இத்தலம்
சிறுபுலியூர் என்று வழங்கப்பட்டிருக்கலாம். இந்தச் சிறு கோலத்திலும் இவர்
தன் நாபிக் கமலத்தில் பிரம்மனைத் தாங்கியிருக்கிறார். திருவடிகளுக்கு அருகே
ஸ்ரீதேவி-பூதேவியரோடு சிறு வடி வில் புலிக்கால் முனிவரும் (இவருக்கும்
பிரத்யேக வழிபாடுகள் நடைபெறுகின்றன),கண்வ முனிவரும் காட்சி தருகிறார்கள்.
ஏற்கெனவே பிரமாண்ட எழிலுடையவராகப் பெருமாளை வேறு திவ்ய தேசங்களில்
தரிசித்தவர்களுக்கு இந்தச் சிறு வடிவம் வித்தியாசமான தோற்ற மாகப்படுவதில்
ஆச்சரியமில்லை. ஆனால் இதே ‘ஏமாற்றம்’ திருமங்கையாழ்வாருக்கும் ஏற்பட்டது
என்பதுதான் குறிப்பிடத்தக்கது. புலிக்கால் முனிவருக்காக அவர் இப்படி
குறுந்தோற்றம் கொண்டார் என்றாலும் தனக்கு அது திருப்தியளிக்கவில்லை
என்பதால், ஏக்கமும் ஏமாற்றமும் கொண்டார் ஆழ்வார். உடனே இவரையும்
சமாதானப்படுத்தும் நோக்கத்துடன், பெருமாள் அசரீரியாக, ‘நீ பார்க்க
விரும்பும் வடிவை திருக்கண்ணமங்கைதிருத்தலத்தில் காண்பாயாக’ என்று அருளிச்
செய்தார். திருவனந்தபுரம் போல தலையை இடது ஓரத்துக்கும், வலது ஓரத்துக்குமாக
அசைத்து தரிசிக்க வேண்டிய அவசியம் போல, திருக்கண்ணமங்கையில் தலையை
கீழிருந்து மேலாகக் கழுத்தை வளைத்துப் பார்க்க வேண்டிய அவசியம்!
பகவானின் அண்ணாந்த தரிசனத்துக்கு முன்னால் கழுத்து வலி தெரியுமா என்ன?
திருக்கண்ணபுரத்தில் வேறு அமைப்பில், பிரமாண்டமாகத் தனக்கு தரிசனம் தர
உத்தரவாதம் அளித்திருக்கும்பெருமாளின் கருணையில் நெகிழ்ந்து இந்த
திருச்சிறுபுலியூர் பெருமாளை உள்ளம் உருகி மங்களாசாசனம் செய்திருக்கிறார்
திருமங்கையாழ்வார்:
கருமா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா
பெருமால் வரை உருவா பிற உருவா
நினது உருவா
திரு மா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே!
‘மிகப் பெரிய, கருநிறம் பூண்ட மேகம் போன்றவனே நீ குளிர்ச்சி மிக்கவன்தான்;
ஆனால், அன்பு இல்லாதவர் உன்னை நெருங்க முடியாதபடி நெ ருப்பாக தகிப்பவன்
நீ. அதேசமயம், அன்பர்களுக்கு குளிர்ந்த நீர் போன்று மகிழ்வளிப்பவன்.மிகப்
பெரிய மலை போன்ற வடிவுடையவன் நீ; ஆனால் இந்த சிறுபுலியூர் தலத்தில்
அன்பருக்காகத் தன்னைச் சுருக்கிக்கொண்டபெருந்தகை நீ. இந்தத் தலத்தில்
திருமகள் நிலைத்து வாழ்கிறாள். இது போதாதென்று பெறற்கரிய கடல் அமுது
போன்றவனாகவும் நீ திகழ்கிறாய். உனது திருவடிகளைச் சரணடைகிறேன்’ என்கிறார்.
ராஜகோபுரத்துக்கு அடியிலேயே பால ஆஞ்சநேயர், பெருமாளின் பால சயனத்
தோற்றத்துக்குக்கட்டியம் கூறுவதுபோல அமைந்துள்ளார். இடது பக் கம் ஆண்டாள்
சந்நதி. இந்த ஆண்டாளுக்கு அருகில் பக்த அனுமன் விநயத்தோடு
காட்சியளிக்கிறார். இவர்களுக்கு எதிரே யாகசாலையும் ஆழ்வார் கள் சந்நதியும்
அமைந்துள்ளன. மூலவரை தரிசித்துவிட்டுகருவறையை வலம் வந்தால், விநாயகரையும்
அவர் முன் பலிபீடத்தையும் காணலாம். தொடர்ந்தால், ஒவ்வொரு திக்கை
நோக்கியபடியும் அடுத்தடுத்து மஹாவிஷ்ணு விக்ரகங்கள் கோஷ்ட தெய்வங்களாகப்
பரிமளிக்கின்றன.
கூடவே விஷ்ணு துர்க்கை. தாயார் திருமாமகள் நாச்சியார்
தனிச் சந்நதியில் அமர்ந்து அருள் பரிபாலிக்கிறார். இவரது உற்சவர் தயாநாயகி
என்ற பெயரில் கருணையின் மொத்த உருவமாகத் திகழ்கிறார். பூமிக்குக் கீழே
கருடன் தனி சந்நதியில் விளங்குகிறார். ஆதிசேஷனோ, ஆனந்த புஷ்கரணியின்
கரையில் எழுந்தருளியிருக்கிறார். இவர் அனைத்து வகையான நாக தோஷங்களையும்
சர்ப்ப கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளையும் தீர்க்க வல்லவர்; மகப்பேறும்
அருள்பவர். மயிலாடுதுறை-பேரளம்-திருவாரூர் பாதையில் கொல்லுமங்குடி என்ற
ஊரிலிருந்து இடப்புறமாக 3 கி.மீ. பயணம் செய்தால் திருச்சிறுபுலியூரை
அடையலாம்.
திருச்சிறுபுலியூர் சென்று அருமா கடல் அமுதனை தரிசிக்கும்வரை அவரது
தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்
கொண்டிருக்கலாம்:
பால வ்யாக்ரபுரே க்ருபாஜலநிதி: ஸ்ரீதேவிகா ப்ரேயஸீ
நந்த்யா வர்த்த விமாந மத்ரா மஹத்தீர்த்தம் த்வநந்தாஹ்வயம்
பால வ்யாக்ரமுநி ப்ராஸாத ஸுமுக: சேஷாங்க சாயீஸதா
ஸ்ரீமாந் தக்ஷிண திங் முகஸ் ஸுரகணை: ஸம்ஸேவ்தோராஜதே
(ஸ்ரீ விஷ்ணு ஸ்தல தர்சனம்)
பொதுப் பொருள்: பாலவியாக்ரபுரி என்றழைக்கப்படும் திருச்சிறுபுலியூர்
திருத்தலத்தில் கிருபா ஸாகரப் பெருமானாய் திகழும் அருமாகடல் அமுதப்பெருமாளே
நமஸ்காரம். திருமாமகள் நாச்சியாருடன், பால வியாக்ர முனிவ ருக்குக் காட்சி
கொடுத்து ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவராய், தெற்கு நோக்கிய திருமுக
மண்டலத்துடன் தேவர்களால் வழிபடப் பெற்றவராய் விளங்கும் பெருமாளே நமஸ்காரம்.
பூஜை அறைலே சுவாமி முன்னாலே வையுங்கோ”
உடனே உங்க ஊருக்கு போய் உங்கள் பூஜை அறைலே சுவாமி முன்னாலே வையுங்கோ”
மார்ச் மாதம். மந்தைவெளியில் ஒரு சத்திரத்தில் என்னுடைய தகப்பனாருடைய
சதாபிஷேகம் !! இரண்டு நாள் முன்னால் நான் என் சித்தப்பா ,சித்தியுடன்
பெரியவாளை தரிசிக்க பூ, பழம் பத்திரிகையுடன் காலை ஏழு மணிக்கு புறப்பட்டு
காஞ்சிபுரம் போனோம் .கூட்டமான கூட்டம் . நாங்கள் வரிசையில் நின்று
எங்களுடைய முறைக்காக காத்து கொண்டிருந்தோம்.
பெரியவாள் பூஜையை
முடித்துக்கொண்டு அந்த மரத்தடியில் வந்து அமர்ந்துகொண்டார். மணி ஒன்று .
சித்தப்பவும் சித்தியும் பெரிய தாம்பாளத்தில் எல்லா பழங்கள் ,பூ
பத்திரிகையுடன் நான் பினனால் தொடர ,நாங்கள் பெரியவாள் முன்னால்.
” நான் கொடுங்கல்லூர் அப்பு நாராயணன் பையன் , என் அண்ணாவுக்கு சதாபிஷேகம் ,பெரியவாள்,ஆசிர்வதிக்கணும் ” — இது என் 68 வயது சித்தப்பா
“1939 லே உங்க ஆத்திலே எனக்கு உங்க அப்பா பாத பூஜை பண்ணி இருக்கார் .உயரமா
,இடுப்பிலே சாவி கொத்து மாட்டிண்டு ராஜா மாதிரி நடப்பார் ,உனக்கு ஞாபகம்
இருக்கா ? “
எனக்கு உடம்பெல்லாம் வியர்த்து விட்டது !! எறக்குறைய 47 வருஷத்துக்கு முன்னால் நடந்த விஷயத்தை நேத்து நடந்தது போல சொல்லறாரே !!
நான் என் தாத்தாவை பார்த்ததுகூட கிடையாது .ஆத்துலே ஒரு போட்டோ கூட இல்லை .
காரணம் போட்டோ எடுத்தால் ஆயுசு குறையுமாம் !!! அந்த காலத்திலே அப்படி ஒரு
நம்பிக்கை .
சித்தப்பா பதில் சொல்லறதுக்கு முன்னாடியே பெரியவா. ” என்னைக்கி சதாபிஷேகம் ? “
“இந்தா, இந்த பூவை முஹுர்த்த வேளையிலே அண்ணாவுக்கும் மன்னிக்கும் அபிஷேகமா போடு, இந்தா பிரசாதம் இதை இட்டுக்க சொல்லி குடு “
பத்திரிகையை காட்ட சொல்லி அதன் மேல் பூவையும் பிரசாதமும் கொடுத்தார் .
ஜ்வலிக்கிற அவருடைய கண்களை என்னால் பார்க்க முடியவில்லை. காரணம் என்
கண்களில் நீர் பனித்தது.
நல்ல வெயில் நேரம் .பகல் இரண்டுமணி.
” நாம சாப்பிட்டுவிட்டு ஆத்துக்கு போறதுக்கு எப்படியும் ஏழு மணியாவது ஆகும் “
பெரியவ தந்த இந்த பூ சூட்டுக்கு வாடாமல் இருக்கணுமே – இது என் கவலை.
அருகில் இருந்த குழாய்லே தண்ணி வந்தா தண்ணி தெளிக்க்கலாமே என்று நான்
அங்கே போன போது ஒரு வயதான மாமி ஓடிவந்து, ” அதுலே தண்ணி தெளிக்காதேங்கோ ,
இனிமே நீங்கள் இங்கே இருக்கபடாது. உடனே உங்க ஊருக்கு போய் உங்கள் பூஜை
அறைலே சுவாமி முன்னாலே வையுங்கோ .அப்புறமா பெரியவா சொன்னதை போல் செய்யுங்கோ
“
சாயங்காலம் வீடு வந்து சேர்ந்ததும் முதல் வேலை சுவாமி அறையில்
பெரியவாள் தந்த பொக்கிஷங்களை கொண்டு வைத்தோம். சதாபிஷேகதுக்கு மேலே செய்ய
வேண்டிய காரியங்கள் தொடர்ந்தது .மூன்றாவது நாள் சதாபிஷேகம்
முகூர்த்தத்திற்கு முன்னால் அடையார் வீட்டில் இருந்த பெரியவாள் அனுக்ரஹித
பூ, பிரசாதம் இவைகளை எடுத்துக்கொண்டு சத்திரத்திற்கு போய் பார்த்தால் என்ன
ஆச்சர்யம் !
இந்த கொதிக்கிற சென்னை வெயிலும் எப்பவும் சூடாகவே
இருக்கிற பூஜை அறையும் பிரசாத பூக்களை ஒன்றும் செய்யமுடியவில்லை . வாடா
மலர்களால் என் பெற்றோர்களுக்கு என் சகோதரர் மற்றும் சித்தப்பா சித்தியுடன்
அபிஷேகம் செய்தோம் .
இதை இன்னிக்கி நினைத்தாலும் பெரியவாளை நினைத்து என் கண்கள் பனிக்கிறது .
இதுதான் முதலும் கடைசியுமாக நான் பெரியவாளை பார்க்கிறது .ஆனால் இன்னைக்கும
என் பெற்றோர்களின் போட்டோவை பார்க்குபோது பெரியவாளின் முகம்தான் முதலில்
தெரிகிறது.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !!!!! ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !!!!! ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !!!!!
பாலுறவும் தான் மனிதனின் அடிப்படை தன்மை
சோஷலிசம் :
ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான், வளர்கிறான், வாழ்கிறான், முடிந்து விடுகிறான். மனித சமுதாயமோ தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒவ்வொரு மனிதனையும் உருவாக்கி, வளர்த்து, அறிவு ஊட்டி, தொழில் திறம் காட்டி, வாழ்விற்கு வேண்டிய பொருட்கள் வசதிகள் அனைத்தையும் அளித்து காத்து வாழ வைக்கிறது சமுதாயம். எனவே ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு வாழ்வளிக்கும் சமுதாய நலனுக்கே தன் அறிவு, உடல் ஆற்றல்களைப் பயன்படுத்தி வாழ வேண்டும். இவ்வாறு தனி மனிதன் தன் கடமையுணர்ந்து ஆற்றி வாழவேண்டுமென்ற தெளிவும் பொறுப்புணர்வும் கொண்டு வாழ ஏற்றச் சமுதாயம் என்பதை சொசைட்டி (Society) என்று வழங்குகிறோம். சொசைட்டியின் நலனை முன் வைத்து ஒவ்வொரு மனிதனும் வாழும் நெறி (ism) தான் சோஷலிசம்.
பொருட்களும், பாலுறவும் தான் மனிதனின் அடிப்படைத் தேவைகள். இவற்றைப் பிறர்க்கோ தனக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ உடல் உணர்ச்சிக்கோ துன்பம் எழாத அளவோடு முறையோடு துய்க்கும் ஒழுக்கமும், பிறர்க்கு ஒத்தும் உதவியும் வாழும் ஈகையும் கடமையும் இணைந்த தொகுப்புக் கருத்து "அறம்" ஆகும். உடல், உயிர், அறிவு, மெய்ப்பொருள் என்ற நான்கு நிலைகளை உணர்ந்து கொள்ளும் அறிவின் முழுமைப்பேறு தான் வீடு பேறு அல்லது மெய் விளக்கமாகும். இறைநிலை விளக்கமும் இதுவே.
மனிதன் இறைநிலையுணர்ந்து, அறவழிகண்டு, பொருட்களையும் பாலுறவையும் துய்த்து வாழ்ந்தால் தான் தனி மனிதனிடத்திலும் சமுதாயத்திலும் அமைதி நிலவும். இதனால் மெய்விளக்கம் பெறும் வழியை இறைவழிபாடாகவும், அற நெறியினை உயிர்வழிபாடாகவும் வைத்து வாழ்க்கை நெறியினை முன்னோர்களான பேரறிஞர்கள் வகுத்துக் காட்டியுள்ளனர். இத்தகைய மனித வாழ்வின் நன்னெறியே "மதம்" என்ற பேரால் வழங்கப் பெறுகின்றது. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு தேவைகளாக மனிதனுக்கு மலர்ந்தன.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான், வளர்கிறான், வாழ்கிறான், முடிந்து விடுகிறான். மனித சமுதாயமோ தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒவ்வொரு மனிதனையும் உருவாக்கி, வளர்த்து, அறிவு ஊட்டி, தொழில் திறம் காட்டி, வாழ்விற்கு வேண்டிய பொருட்கள் வசதிகள் அனைத்தையும் அளித்து காத்து வாழ வைக்கிறது சமுதாயம். எனவே ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு வாழ்வளிக்கும் சமுதாய நலனுக்கே தன் அறிவு, உடல் ஆற்றல்களைப் பயன்படுத்தி வாழ வேண்டும். இவ்வாறு தனி மனிதன் தன் கடமையுணர்ந்து ஆற்றி வாழவேண்டுமென்ற தெளிவும் பொறுப்புணர்வும் கொண்டு வாழ ஏற்றச் சமுதாயம் என்பதை சொசைட்டி (Society) என்று வழங்குகிறோம். சொசைட்டியின் நலனை முன் வைத்து ஒவ்வொரு மனிதனும் வாழும் நெறி (ism) தான் சோஷலிசம்.
பொருட்களும், பாலுறவும் தான் மனிதனின் அடிப்படைத் தேவைகள். இவற்றைப் பிறர்க்கோ தனக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ உடல் உணர்ச்சிக்கோ துன்பம் எழாத அளவோடு முறையோடு துய்க்கும் ஒழுக்கமும், பிறர்க்கு ஒத்தும் உதவியும் வாழும் ஈகையும் கடமையும் இணைந்த தொகுப்புக் கருத்து "அறம்" ஆகும். உடல், உயிர், அறிவு, மெய்ப்பொருள் என்ற நான்கு நிலைகளை உணர்ந்து கொள்ளும் அறிவின் முழுமைப்பேறு தான் வீடு பேறு அல்லது மெய் விளக்கமாகும். இறைநிலை விளக்கமும் இதுவே.
மனிதன் இறைநிலையுணர்ந்து, அறவழிகண்டு, பொருட்களையும் பாலுறவையும் துய்த்து வாழ்ந்தால் தான் தனி மனிதனிடத்திலும் சமுதாயத்திலும் அமைதி நிலவும். இதனால் மெய்விளக்கம் பெறும் வழியை இறைவழிபாடாகவும், அற நெறியினை உயிர்வழிபாடாகவும் வைத்து வாழ்க்கை நெறியினை முன்னோர்களான பேரறிஞர்கள் வகுத்துக் காட்டியுள்ளனர். இத்தகைய மனித வாழ்வின் நன்னெறியே "மதம்" என்ற பேரால் வழங்கப் பெறுகின்றது. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு தேவைகளாக மனிதனுக்கு மலர்ந்தன.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
இறையுணர்வும், அறநெறியும்
மனித இன வாழ்வுக்கு இறையுணர்வும், அறநெறியும் சரியான வழிகாட்டுதல்கள்
ஆகும். இறைநிலை பற்றிய அறிவு என்பது ஒரு மாபெரும் மறைபொருள் விளக்கமாகும்.
இது ஒருவர் தன் அகத்தவத்தின் மூலம் மனச் சுழல் விரைவைக் குறைத்து அமைதி
என்னும் மனநிலைக்கு வந்து, அந்த நிலையில் சிந்தித்து இறையுணர்வு பெற
வேண்டும். சாதாரணமாக வாய் மொழியின் மூலமாகவோ, மந்திரங்கள் மூலமாகவோ,
சடங்குகள் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ இறைநிலையை உண்மையாக உணர
முடியாது.இறைநிலை உணர்வு ஏற்படவில்லை என்றால் ஒரு மனிதனுக்கு அறநெறி
வாழ்வும் அமையாது.
பலகாரணங்களால் இக்காலத்தில் இறையுணர்வு என்ற அறிவின் முழுமைப்பேறும், அறநெறி என்ற சீரமைந்த வாழ்வும் நிலை குலைந்து போயிருக்கின்றன. இதன் காரணமாகவே இன்று நாம் மனித குல வாழ்வில் காணுகின்ற எல்லா வகையான குழப்பங்களும், துன்பங்களும் நேர்ந்துள்ளன. அறிவின் சிந்தனையாற்றல் செயல்படாததனாலும், பழக்கத்தினாலும் தொடர்ந்து வருகின்ற செயல்கள் பலப்பல. களைகளை அகற்றுவது போன்றே இவற்றையும் அகற்றி விட வேண்டியது மனித இன வாழ்வுக்கும், வளத்திற்கும் நலமளிக்கும். விவசாயத்தில் பயிரை வளரவிடாது தடுக்கின்ற களைகளை போன்ற பல செயல்கள் உருவாகி சமுதாயத்தில் மண்டிக்கிடக்கின்றன.
"இறையுணர்வு பெற்று, அறம் ஆற்றி", வாழுகின்ற ஆன்மீக நெறியில் மனிதன் வாழ்ந்தால் - சமுதாயத்தில் ஏழ்மை என்பது இருக்காது. பொய், கொலை, களவு, சூது, விபச்சாரம் என்னும் ஐந்து வகையான பழிச் செயல்களும் இருக்காது. அறிவின் குறைபாட்டினால் தனக்கும், பிறருக்கும் துன்பங்களை விளைவிக்கின்ற குற்றங்களும் சமுதாயத்தில் நிலவா. எனவே வயது வந்த அனைவரும் முறையாக "குண்டலினி யோகம்" பயின்று இறையுணர்வு பெற வேண்டும். வாழ்வில் அறநெறியையும், இறையுணர்வையும் பின்பற்றி வாழ வேண்டும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
பலகாரணங்களால் இக்காலத்தில் இறையுணர்வு என்ற அறிவின் முழுமைப்பேறும், அறநெறி என்ற சீரமைந்த வாழ்வும் நிலை குலைந்து போயிருக்கின்றன. இதன் காரணமாகவே இன்று நாம் மனித குல வாழ்வில் காணுகின்ற எல்லா வகையான குழப்பங்களும், துன்பங்களும் நேர்ந்துள்ளன. அறிவின் சிந்தனையாற்றல் செயல்படாததனாலும், பழக்கத்தினாலும் தொடர்ந்து வருகின்ற செயல்கள் பலப்பல. களைகளை அகற்றுவது போன்றே இவற்றையும் அகற்றி விட வேண்டியது மனித இன வாழ்வுக்கும், வளத்திற்கும் நலமளிக்கும். விவசாயத்தில் பயிரை வளரவிடாது தடுக்கின்ற களைகளை போன்ற பல செயல்கள் உருவாகி சமுதாயத்தில் மண்டிக்கிடக்கின்றன.
"இறையுணர்வு பெற்று, அறம் ஆற்றி", வாழுகின்ற ஆன்மீக நெறியில் மனிதன் வாழ்ந்தால் - சமுதாயத்தில் ஏழ்மை என்பது இருக்காது. பொய், கொலை, களவு, சூது, விபச்சாரம் என்னும் ஐந்து வகையான பழிச் செயல்களும் இருக்காது. அறிவின் குறைபாட்டினால் தனக்கும், பிறருக்கும் துன்பங்களை விளைவிக்கின்ற குற்றங்களும் சமுதாயத்தில் நிலவா. எனவே வயது வந்த அனைவரும் முறையாக "குண்டலினி யோகம்" பயின்று இறையுணர்வு பெற வேண்டும். வாழ்வில் அறநெறியையும், இறையுணர்வையும் பின்பற்றி வாழ வேண்டும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
குழந்தை வடிவில் வந்து குழந்தையை காத்த காமாக்ஷி
குழந்தை வடிவில் வந்து குழந்தையை காத்த காமாக்ஷி
பெரியவா அவர்கள் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை பற்றிய
படிக்கும்போது நம்மையுமறியாமல் கண்களில் நீர் கசிந்துவிடுவதுண்டு. எனக்கு
பலமுறை அது போல ஏற்பட்டிருக்கிறது. நம் வாசகர்களுக்கும் அப்படியே. ஜாதி மத
பேதமின்றி அனைவருக்கும் அந்த கருணைக் கடல் அருள் மழை பொழிந்தது,
பொழிந்துவருகிறது.
அவரையே கதி என்று சரணடைந்த பக்தர்களுக்காக பல
நேரங்களில் இறைவனிடம் மன்றாடி பல மகத்தான விஷயங்களை சாதித்து தந்துள்ளார்.
இத்தனைக்கும் அந்த மகான் தனக்கென்று இறைவனிடம் எதுவுமே கேட்டதில்லை. எனவே
கேட்பவர் கேட்கும்போது அதுவும் மற்றவர்களுக்காக கேட்கும்போது இறைவன் அதை
கொடுத்துத் தானே ஆகவேண்டும்.
காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!
பெரியவாளை தர்சனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப்
பெண்குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த
பக்தரின்அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது,
கூட வந்ததாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு ஓரமாக
வண்டியைநிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர்
பக்கம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஐந்து
செகண்டுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது போய்க்கொண்டிருந்தன.
காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை,எதிர்பக்கம்
வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப்பார்ப்பது போல்,
“தாத்தா!..” என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக்கொண்டு
ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தாள் ! வண்டிகளைப் பற்றிய பயமே
அந்தக்குழந்தைக்கு இல்லை! அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன
சமயம்,வேகமாக வந்த லாரி, அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது! கண்
இமைக்கும்நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்து அத்தனை பேரையும்
ஸ்தம்பிக்கவைத்துவிட்டது!
அலறிக்கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு காஞ்சிபுரத்தில் ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.
“கொழந்தையை ஒடனே மெட்ராஸுக்கு கொண்டு போய்டுங்க! ரொம்ப ஸீரியஸ்கேஸ்!..”
டாக்டர்கள் கைவிரித்து விட்டு, ஏதோ முதலுதவியைச் செய்தனர்.விஷயத்தை
கேள்விப்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்த அவர்களுடைய
சொந்தக்காரர்ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து விட்டு, நேராக
பெரியவாளிடம்ஓடினார்.
“பெரியவாளைப் பாக்கறதுக்காக வர்றச்சே வழில
கொழந்தை மேல லாரி மோதிடுத்து!டாக்டர்கள் கைவிரிச்சுட்டா! பெரியவாதான்
கொழந்தையைக் காப்பாத்தணும்..”அழுதார்.
“என்னைப் பாக்க வரச்சேயா
ஆக்ஸிடென்ட் ஆய்டுத்து?…” என்று கேட்டுவிட்டு, சற்றுநேரம் கண்களை மூடிக்
கொண்டிருந்தார். அப்புறம் பக்கத்தில் இருந்த ஒரு ஆப்பிள்பழத்தை எடுத்து
அவர் கையில் ப்ரஸாதமாகப் போட்டுவிட்டு,
“மெட்ராஸுக்கு கொழந்தையைப்
பாக்க போறச்சே இதைக் குடு. போறதுக்குமுன்னாடி, காமாக்ஷியை தர்சனம்
பண்ணிட்டுப் போ!…” என்று உத்தரவிட்டார்.உறவினரும் உடனேயே காமாக்ஷி
கோவிலுக்குச் சென்று தர்சனம் பண்ணப் போனார்.ஆனால், நடை சார்த்தும் நேரம்
என்பதால், அவரால் ஒரே ஒரு க்ஷணம் மட்டுமேஅம்பாளை தர்சனம் பண்ண முடிந்தது.
நெய்தீபச் சுடரில் ஸர்வாலங்கார பூஷிதையாக பச்சைப் பட்டுப் புடவையுடன்,
அருள்பொழியும் முகத்தோடும் அமர்ந்திருந்த அம்பாளை ஒரு க்ஷணமே
தர்சனம்பண்ணினாலும், மனஸில் அந்தக் கோலத்தை இருத்தியபடி மெட்ராஸுக்கு
பஸ்ஏறினார். நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று, ICU வில் இருந்த
குழந்தையின்தலைமாட்டில் பெரியவா அனுக்ரஹித்துக் கொடுத்த ஆப்பிளை எப்படியோ
வைத்துவிட்டார். அழுது கொண்டிருந்த பெற்றோரிடம் பெரியவாளிடம்
விஷயத்தைச்சொன்னதைப் பற்றி கூறினார்.
“கொழந்தை “கோமா”க்குப்
போய்ட்டா! மணிக்கணக்கோ, நாள்கணக்கோன்னு டாக்டர்சொல்றார்….” அம்மா கதறினாள்.
சில மணி நேரங்கள் கழிந்தது. ICU வாசலில்குடும்பமே அமர்ந்திருந்தது.
இதோ! குழந்தையின் உடலில் சிறு சிறு அசைவுகள்! “கோமா”;மணிக்கணக்கு;
நாள்கணக்கு என்று பெரிய பெரிய டாக்டர்கள்சொன்னதையெல்லாம் அடித்து த்வம்ஸம்
பண்ணிவிட்டு, “அம்மா!…”என்று குழந்தையை அழைக்க வைத்தது
தெய்வத்தின்அனுக்ரஹம் ! அழுகையெல்லாம் நிமிஷத்தில் காணாமல் போனது.
ஓரிரண்டுநாட்களில் ஓரளவு நன்றாகத் தேறிய குழந்தையைத் தனி ரூமுக்கு
ஷிப்ட்பண்ணினார்கள். ஆப்பிள் கொண்டு வந்த உறவினரும் கூடவே இருந்தார்.
“அம்மா…..” தீனமாகக் கூப்பிட்டாள் குழந்தை.
“என்னம்மா?….”
“எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா?…”
“பாப்பாவா? இங்க ஏதும்மா பாப்பா? நீ ஆஸ்பத்ரிலன்னா இருக்கே! இங்க பாப்பா யாரும்இல்லியேடா!..”
குழந்தை சிணுங்கினாள். “அந்தப் பாப்பா எங்கேம்மா? எனக்கு அவகூடவெளையாடணும்..”
ஏதோ அரைகுறை ஞாபகத்தில் உளறுகிறாள் என்று எண்ணி அவளைசமாதானப்படுத்த வேண்டி
“எந்தப் பாப்பா? எப்டி இருந்தா சொல்லு! நான் கூட்டிண்டுவரேன்” என்றாள்.
“பச்சைப் பட்டுப்பாவாடை கட்டிண்டு எங்கூடவே இருந்தாளே! அந்த பாப்பாதான்!…”
மற்றபேருக்கு புரியாவிட்டாலும், ஆப்பிள் கொண்டு வந்த உறவினருக்கு பொட்டில்அடித்தார்ப்போல் புரிந்தது!
“போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…”
பெரியவாசொன்னதும், அம்பாள் ஒரு க்ஷணமே தர்சனம் தந்தாலும், ஹ்ருதயத்தை
விட்டுஅகலாவண்ணம், பச்சைப் பட்டுப் புடவையில் காஷி அளித்ததும் அவருக்குப்
புரிந்தது;மேனியெல்லாம் புல்லரித்தது!
பெரியவா சொன்னதுக்கு எத்தனை
மஹத்தான அர்த்தம்! அம்பாளே அந்தக்குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து
கூட விளையாடி, அவளுக்குஉயிரூட்டியிருக்கிறாள்!
உறவினர்,
மற்றவர்களுக்கு இதைச் சொன்னதும், திக்கற்றோருக்கு துணை வரும்பெரியவா இருந்த
காஞ்சிபுரம் நோக்கி விழுந்து விழுந்து நமஸ்கரித்தனர்.
Saturday 23 November 2013
அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை
அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும்
கர்ணனை கொடை வள்ளல்
என்று சொல்வது பிடிக்கவில்லை.
அவருடன் வாதிட்டான்.
கண்ணன்
உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார்.
அர்ஜுனனை அழைத்து,
''இன்று மாலைக்குள் இந்தக்
குன்று முழுவதையும் நீ தானம்
செய்து முடித்து விட்டால், நான்
உன்னை கர்ணனை விட சிறந்த
கொடை வள்ளல் என்று ஒத்துக்
கொள்கிறேன்,''என்றார்.
அர்ஜுனனும் ஊர் முழுக்க
செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள்
வரவர,
தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க
ஆரம்பித்தான்.
எவ்வளவோ பிரயாசைப்பட்டும்
அவனால் அன்று மாலைக்குள்
பாதி அளவு கூட தானம்
செய்து கொடுக்க முடியவில்லை.
அப்போது அந்தப் பக்கம் கர்ணன்
வரவே, கண்ணன் அவனை அழைத்து,
''கர்ணா, இந்தத் தங்கக்
குன்றை நாளை காலைக்குள் தானம்
செய்து கொடுத்து விட வேண்டும்,
உன்னால் முடியுமா?''என்று கேட்டார்.
கர்ணனும், ''இது என்ன பெரிய
வேலையா?'' என்று கூறிக்
கொண்டே அந்தப் பக்கம் வந்த
வறியவர் இருவரை அழைத்தான்.
அவர்களிடம், ''உங்கள் இருவருக்கும்
இந்த தங்க மலையை தானம்
அளிக்கிறேன்.
வெட்டி உபயோகித்துக்
கொள்ளங்கள்,''என
்று கூறியபடியே,சென்று விட்டான்.
அப்போது கண்ணன் அர்ஜுனனிடம்
சொன்னார்,
''இப்போது உனக்கு வித்தியாசம்
தெரிகிறதா? உனக்கு முழுமையாகக்
கொடுக்கலாம் என்ற எண்ணம்
கடைசி வரை வரவில்லை..
நீதி: தானமோ அன்போ நம் மனதின்
ஆழத்திலிருந்து முழுமையாக
கொடுக்காதவரை அதன்
சிறப்பு தெரிவதில்லை
கர்ணனை கொடை வள்ளல்
என்று சொல்வது பிடிக்கவில்லை.
அவருடன் வாதிட்டான்.
கண்ணன்
உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார்.
அர்ஜுனனை அழைத்து,
''இன்று மாலைக்குள் இந்தக்
குன்று முழுவதையும் நீ தானம்
செய்து முடித்து விட்டால், நான்
உன்னை கர்ணனை விட சிறந்த
கொடை வள்ளல் என்று ஒத்துக்
கொள்கிறேன்,''என்றார்.
அர்ஜுனனும் ஊர் முழுக்க
செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள்
வரவர,
தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க
ஆரம்பித்தான்.
எவ்வளவோ பிரயாசைப்பட்டும்
அவனால் அன்று மாலைக்குள்
பாதி அளவு கூட தானம்
செய்து கொடுக்க முடியவில்லை.
அப்போது அந்தப் பக்கம் கர்ணன்
வரவே, கண்ணன் அவனை அழைத்து,
''கர்ணா, இந்தத் தங்கக்
குன்றை நாளை காலைக்குள் தானம்
செய்து கொடுத்து விட வேண்டும்,
உன்னால் முடியுமா?''என்று கேட்டார்.
கர்ணனும், ''இது என்ன பெரிய
வேலையா?'' என்று கூறிக்
கொண்டே அந்தப் பக்கம் வந்த
வறியவர் இருவரை அழைத்தான்.
அவர்களிடம், ''உங்கள் இருவருக்கும்
இந்த தங்க மலையை தானம்
அளிக்கிறேன்.
வெட்டி உபயோகித்துக்
கொள்ளங்கள்,''என
்று கூறியபடியே,சென்று விட்டான்.
அப்போது கண்ணன் அர்ஜுனனிடம்
சொன்னார்,
''இப்போது உனக்கு வித்தியாசம்
தெரிகிறதா? உனக்கு முழுமையாகக்
கொடுக்கலாம் என்ற எண்ணம்
கடைசி வரை வரவில்லை..
நீதி: தானமோ அன்போ நம் மனதின்
ஆழத்திலிருந்து முழுமையாக
கொடுக்காதவரை அதன்
சிறப்பு தெரிவதில்லை
தட்டுங்கள் திறக்கப்படும்.
தியானம் என்றால் என்ன ? அதன் தேவை என்ன ? பலன் என்ன ? என்பதைக் குறித்து
நம் முன்னோர்களே தீவிரமாக ஆராய்து விளக்கியிருக்கிறார்கள். உலகில் வேறு
எந்த தேசத்திலும் தியானத்திற்கு இவ்வளவு முக்கியத்தும் தரப்படவில்லை. இன்று
விஞ்ஞானிகளானாலும், உளவியல் நிபுணர்களானாலும், கடவுளே இல்லை என்று
சொல்பவர்களானாலும், பிற தேசங்களில் பிற சமயங்களை பின்பற்றுபவர்களானாலும்
எல்லோருமே பரவலாக தியானத்தின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். உலக
அளவில் நம் தேசத்திற்கென்றுஒரு தனி மரியாதை இருக்கிறது. அதற்குக் காரணம்
யோகம், ஆன்மிகம் போன்ற விஷயங்களே. இங்கு வாழும் மக்கள் ஆன்ம பலம்
மிக்கவர்கள். காரணம் நம் முன்னோர்களின் மரபு அணுக்கள் நம் உடலிலும்
இருப்பதால்தான்.நல்லவனாக இருந்தாலும், கெட்டவனாக இருந்தாலும், எத்தகையவனாக
இருந்தாலும், கடவுளே இல்லை என்று சொல்பவனாக இருந்தாலும் சரி அவனுக்குள்ளும்
இந்த ஆன்மிக அணுக்கள் இயங்கிக் கொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொரு
இந்தியனின் முகத்திலும் இந்த ஆன்மிக ஓளியை காண முடியும்.
பொதுவாக
தியானம் இரண்டு வகைப்படும். ஒன்று உபாசனை மற்றது நிதித்யாசனம். உபாசனை
என்பது பக்தி நெறி என்று கொள்ளலாம். நிதித்யாசனம் என்பதை ஞான நெறி அல்லது
யோக நெறி என்று கொள்ளலாம். நிதித்யாசனம் என்றால் ஆன்ம விசாரம். பதஞ்சலி யோக
சாஸ்திரம் கூறும் சாதனையில் இயமம், நியமம் என்ற மனத்தூய்மை பயிற்சியில்
ஆரம்பித்து, பிறகு ஆசனம், பிராணாயாமம் , மனதைப் புற் பொருள்களில் இருந்து
பிரிக்க பிரத்தியாஹாரம்,பிரித்த மனதை ஓரிடத்தில் குவிக்கும் தாரணை எல்லாம்
கடந்து ஏழாவது படியாக தியானம் வருகிறது. அதாவது ஞான நெறியைப் பொறுத்த வரை
ச்ரவணம்(சாஸ்திரங்களைக் கேட்டல்), மனனம்( கேட்டவற்றைச் சிந்தித்தல்),
நிதித்யாசனம்(தொடர்வது ஆராய்ச்சி அல்லது பயிற்சி) இது தியானம் போன்ற ஒரு
நிலையே.
பக்தி நெறியில் பிரார்த்தனை, இறைவன் புகழைப் பாடுதல், பூஜை
என்று தொடங்கி பிறகு தியானம் வருகிறது. உபாசனையில் தெய்வ வடிவத்தையோ,
ஓளியையோ, ஆகாயத்தையோ, அன்பு, கருணை, வலிமை போன்ற பண்புகளையோ, மந்திரங்களையோ
தியானப் பொருளாகக் கொண்டு தியானிப்பார்கள். அதாவது தங்கள் உணர்வை தியானப்
பொருள் மீது செலுத்துவது உபாசனை. நிதித்யாசனம் என்பதில் உணர்வு குவிதலோ,
சுயேச்சையின் முயற்சியோ இல்லை. உணர்வின் மூலக் காரணத்தைத் தேடுவதாகும்.
நான் என்ற எண்ணம் உணர்வு எங்கிருந்து வருகிறது என்று தேடி மூலக் காரணத்தை
அடைவதே நிதித்யாசனம்.
தியானம் என்றால் வெறுமனே மனதை ஒருமைப்படுத்துவது
மட்டுமே என்று கருதுகிறார்கள்.மனதை எந்தப் பொருளில் வேண்டுமானாலும்
ஒருமைப்படுத்தலாம். நம் அன்றாட வாழ்வில் இயல்பாகவே இது நடந்து கொண்டுதான்
இருக்கிறது. ஆனால், இத்தகைய மன ஒருமைப்பாட்டால்எந்த வித பயனும் இல்லை.
ஏனென்றால் இது தன்னுணர்வின்றி ஆசையின் தூண்டுதலால் நிகழ்கிறது. தியானம்
என்பதோ, ஆசையிலிருந்து விடுபட்ட சுயேச்சையை ஓர் உயர்ந்த உணர்வு மையத்தில்
குவிப்பதாகும். யோக தியானம் என்பது மனதின் செயல்பாடுகளை அறிந்து,
ஆன்மாவாகிய புருஷனைப் பிரகிருதியிலிருந்து பிரிப்பதாகும். வேதாந்த தியானமோ
தியானிப்பவரை தியானிக்கும் பொருளோடு இணைப்பதாகும். அதாவது ஜீவாத்மா,
பரமாத்மா ஐக்கியம்.
யோக தியானத்தில் எந்தப் பொருளையும் தியானிக்கலாம்.
வேதாந்த தியானத்திலோ கடவுளை மட்டுமே தியானிக்க வேண்டும். யோக தியானம்
பழகுவதற்கு உண்மையைப் பற்றிய எந்த விஷயங்களையும் முன்னரே அறிந்திருக்க
வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வேதாந்த தியானம் அவ்வாறல்ல. வேதாந்த நூல்கள்
கூறும் கருத்துக்களை சாதகன் நன்கு அறிந்து உணர்திருக்கவேண்டும். அதாவது
நூலறிவை, உண்மை அறிவாக மாற்றுவதே வேதாந்த தியானம். காலம் செல்லச் செல்ல
எல்லா தியானங்களும் இணைந்து விட்டன. அதற்கு முக்கியக் காரணம் தந்திர
மார்க்கமாகும். அவர்கள் கண்டு பிடிப்பான தந்திரம், மந்திரம், குண்டலினி
போன்ற கருத்துக்களடங்கிய தியானமே இப்போது எங்கும் பரவலாகக் காணப்படுகிறது.
தியானம் என்பது கரை காண முடியாத உணர்வு என்ற கடலின் ஆழங்களில் காணாத
கடவுளைத் தேடுவதாகும். பிரார்த்தனை செய்யும் போது இறைவன் நம்மிடம்
வருவதற்கு காத்திருப்பது போல ஒவ்வொரு சாதகனும் தியானத்தின் மூலமாகக்
காத்திருக்கிறான். எனினும் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா ? பொறுமை
எல்லை மீறும் போது, மேலும் காத்திருக்க முடியாமல் ஆன்ம தாகம் கொண்டு தேடத்
தொடங்குகிறான். அப்படி ஆன்ம தாகத்தோடு ஆன்மாவானது தன் தலைவனை நோக்கித்
தேடிக் கொண்டு செல்கின்ற அந்த சூக்குமமான இயக்கமே தியானம்.
அல்லாமல்,
வெறுமனே மனதை அமைதிப்படுத்துவது தியானமாகாது. மன அமைதி என்பது ஒரு
முன்னேற்பாடு மட்டுமே. உலகப் பொருள்களை தேடுவது போல புற உலகில் இறைவனைத்
தேடுவதல்ல தியானம். இது அகத் தேடல். நமது உணர்வுகளால் உணர்வுக்குள்
தேடுவது. உணர்வு மையத்தில் கொண்டு போய் மனதைக் குவிப்பது. ஏனென்றால் ஆன்மிக
உலகின் வாசல் இந்த மையத்தில்தான் மறைந்துள்ளது. மன ஆற்றல்கள் அனைத்தையும்
கொண்டுபோய் அந்த மையத்தில் குவிக்கும் போது அது திறக்கிறது. எனவே தியானம்
என்பது அகக் கோயிலின் கதவுகளைத் தட்டுவதே ஆகும்.
Subscribe to:
Posts (Atom)