Friday 22 November 2013

முகநூலில் சில கருத்துக்களை

முகநூலில் சில கருத்துக்களை பதிவு செய்வது என்பது ஒவ்வொருவருடைய விருப்பம். அதற்கு மற்றவர்கள் பதில் செய்வது மற்றவர்களுடைய விருப்பம். சிலசமயம் நகைச்சுவையாக பதில் வரும். சில சமயம் எதிர்த்து பதில் வரும். அதைப்பார்த்து கோபம் கொள்வதில் அர்த்தம் இல்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதே மாதிரி நான் ஒரு பதிவை இரண்டு நாட்களுக்கு முன்பு செய்திருந்தேன்.2G சம்மந்தப்பட்ட கனி இங்கே எங்கே? என்று. அதற்கு நான் மிகவும் மரியாதை வைத்திருந்த ஒருவர்  உபயோகித்து பதில் அளித்திருந்தார். அவருக்கு உங்களிடமிருந்து இந்த வார்த்தையை நான் எதிர்பார்க்கவில்லை என்று தனிப்பட்டஅனுப்பியிருந்தேன். மெசேஜ் அனுப்பிய ஐந்து நிமிடங்களில் இருந்து அந்த நபரிடமிருந்து வந்த பதில் அநாகரிகத்தின் உச்ச கட்டம்.(மஹாபெரியவா பக்தர்கள்) பிராமணர்கள் யாரும் அந்த வார்த்தைகளை உபயோகிக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மட்டமான வார்த்தைகளால் என்னை விமர்சித்து பதில் அளித்திருந்தார். என்னுடைய ல் மஹாபெரியவா படம் இருக்கப் போய் தான் பாலபெரியவாளும், புதுப்பெரியவாளும் கஷ்டங்களை அனுபவிப்பவதாகவும் தெரிவித்திருந்தார் அந்த மரியாதைக்குரிய நபர். அந்த நபரை உடனே block செய்து விட்டேன். அந்த நபரின் பெயரினை உங்களுக்கு விருப்பப்பட்டால் தனித்தனியாக மெசேஜ் அனுப்புகிறேன். இனி முகநூலில் தொடர்ந்து இருப்பதா வேண்டாமா என்ற முடிவிற்கும் வந்துவிட்டேன்.

No comments:

Post a Comment