Monday 6 October 2014

சிவபுண்ணியம் பெறவும், தீவினைகள் நீங்கவும் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்



       

Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931
                               



                                          ஒம் நமசிவாய
           தேவர்களுக்கு மகாதேவராகவும் அனைத்துயிர்களுக்கும்  அம்மையப்பராகவும் உள்ள  நம் ஈசனை  பிரதோஷ காலத்தில் வழிபட்டு இம்மைக்கும் மறுமைக்கும்  புண்ணியம் சேர்ப்போம் .
           

 பதிமூன்றாம்  திதியான  திரயோதசி  திதி  வரும் நாட்களில் மாலை சுமார் 4.30 மணி முதல் 7.30 மணி வரை பிரதோஷ  காலம் .
           
இந்த நேரத்தில் நந்தி எம்பெருமானையும்  சிவபெருமானையும்  அபிஷேகம்  ஆராதனை செய்து வேண்டியது கிடைக்க  வழிபடுவோம் .
           
இந்த புண்ணிய வேளையில்  ஓம் நமசிவாய  என்று 108 தடவை உச்சாடனம் செய்து வலம்
வரவேண்டும் .

மேலும்  நாம லிகித ஜபம்  என்று சொல்லக் கூடிய  பேப்பரில்  ஒம் நமசிவாய  108  முறை எழுதவேண்டும் .இவ்வாறு  12 மாதங்கள்  நாம் பிரார்த்தனை செய்து வர காரியத்தடை ,
திருமணம்கைகூடாமை ,பிள்ளைப்பேறு ,
கடன்சுமை ,மனநிம்மதியின்மை போன்ற இம்மையில் உள்ள பிரச்சினைகள்  தீர்ந்து   விடும் என்பது பல்லாயிரக்கணக்கானவர்கள்  கண் கண்ட   உண்மை ஆகும் .
 
வேதங்களையும் ஆகமங்களையும்  நந்தி தேவர் மூலமாகவே  நமக்கு  அருளியுள்ளார். நந்தி நாமம் நமசிவாயவே  என்பதன் மூலம்  சிவபெருமான் வேறு நந்தி  வேறு அல்ல என்பது தெளிவாகும்.

நமசிவாய என்ற ஐந்தெழுத்து  பற்றி சிவஞானபோதம் 9 ஆம்  சூத்திரத்தில் மெய்கண்டார்  கூறியுள்ளார் .
தேவார  ஆசிரியர்கள் மூவருமே  ஐந்தெழுத்து மந்திரம்  எவ்வாறு  சிறந்தது , உயர்ந்தது  என்று அருளியுள்ளார்கள் . 


சிவபுண்ணியம் பெறவும், தீவினைகள் நீங்கவும் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்

துஞ்சலும்  துஞ்சல் இல்லாத  போழ்தினும்
நெஞ்சகம் நைந்துநினைமின் நாள்தோறும்
வஞ்சகம் அற்று அடிவாழ்ந்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே

மந்திர நான்மறை ஆகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்
தேனை வழி திறந்து ஏதுவர்க்கு இடர்
ஆனா கெடுப்பன அஞ்செழுத்துமே

நல்லவர் தீயர்  எனாது ,நச்சினர்
செல்லல் கெடச் சிவமுத்தி  காட்டுவ
கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே

கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து அகத்து
அங்குள பூதம் அஞ்ச ஐம்பொழில்
தங்கு அரவின் படம் அஞ்சும் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்துஎய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தோறும்
மாடு கொடுப்பன மண்ணு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செழுத்துமே

வண்டு அமர் ஓதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்தபின் அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே

கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச்
சீர்வணச் சேவடி செவ்வினாள் தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு  
ஆர்வணம் ஆவண அஞ்செழுத்துமே

புத்தர் சமண் கழுக்கையர் பொய் கொளாச்
சித்தாத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு   
அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே

நற்றமிழ் ஞான சம்பந்தன் நான் மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலைஈரைந்தும்அஞ்செழுத்துமே
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே


                                திருச்சிற்றம்பலம்


                       போற்றி  ஓம் நமசிவாய



Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com


No comments:

Post a Comment