உபதேசத்துக்காக விடியகாலை வந்த புத்தர். தனது சீடர்கள் முன்னால் கையில்
ஒரு சிறு துணியுடன் வந்து அமர்ந்தார். எதுவும் பேசாமல் அத்துணியில் ஜந்து
முடிச்சுகளைப் போட்டுக்கொண்டிருந்தார். சீடர்கள் புத்தரின் வழக்கத்துக்கு
மாறான செயலைக் கண்டு திகைத்து நின்றனர். ஐந்து முடிச்சுகளை போட்டபின்பு பேச
தொடங்கினார் புத்தர்.
"நான் ஐந்து முடிச்சுகள் போட்டேன்..! இதை
அவிழ்க்கப்போகிறேன். ஆனால்.. அதற்குமுன் உங்களிடம் இரண்டு கேள்விகள்
கேட்கப்போகிறேன். இந்த முடிச்சுகள் விழுந்துள்ள துணி முன்பு இருந்த
துணிதானா..? அல்லது வேறு துணியா..?"
ஆனந்தா எழுந்து, 'ஒருவகையில்
எல்லாமே ஒன்றுதான். முன்பு இருந்ததும் இப்போது இருப்பதும் ஒன்றேதான்..
முடிச்சுகளில் மட்டுமே வேறுபாடு.. ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது
அவ்வளவே... முன்பு இருந்த துணி சுதந்திரமானது..முடிச்சுகள் விழுந்ததும்
இதன் சுதந்திரம் போய்விட்டது.. இப்போதுள்ள துணி அடிமையாகி இருக்கிறது..!"
என்றார்..
அதற்குப் புத்தர்...!
“ஆம் ஆனந்தா.. நீ சொன்னது சரியே...! ஒரு வகையில் ஒரே துணிதான். மற்றொரு
வகையில் வேறுபட்டுள்ளது.எல்லோரும் இயல்பில் சுதந்திரமானவர்கள் தான்..!
முடிச்சுப் போட்டுக்கொண்டு சிக்கலில் சிக்கி அடிமைப்பட்டு விடுகின்றனர்.
அதனால் தனித்தனி உலகங்களாகவே மாறிப்போய்விடுகின்றர். சரி எனது அடுத்த
கேள்வி...?
இந்த முடிச்சுகளை அவிழ்க்க என்ன செய்யவேண்டும்..?
சாரி எழுந்தார்...!
“குருவே அவற்றை அவிழ்க்க நான் அருகில் வர அனுமதிக்கவேண்டும்..!
முடிச்சுகள் எவ்வாறு போடப்பட்டுள்ளதுஎன்று அறியாதவரை.., அவற்றை
அவிழ்க்கவும் வழியில்லை..! முடிச்சுப் போடப்பட்டதற்கானமுறையை அறிந்தால்
அவிழ்க்க எளிதாக இருக்கும்.. நெருங்கிப் பார்த்து அறியாமல் எதுவும் செய்ய
இயலாது.. நினைவோடு செய்தால் முடிச்சுகள் எளிமையாக விழும்.. நினைவின்றி
விழும் முடிச்சுகள் மிகவும் சிக்கலானவையே. .சில நேரம் அவிழ்க்கவே முடியாமல்
போய்விடும்!" என்றார்.
அதற்கு புத்தர்..
“சாரி.. நீ மிகவும் சரியாகச் சொன்னாய்..! அதுதான் வாழ்க்கை..! அதுதான் வாழ்க்கையின் சிக்கல்..!“ என்றார் புத்தர்.
நம்முடைய வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்குக் காரணம் நாம்தான்..! நம்மை
அறியாமல் நினைவின்றி நாம் இடும் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல்
தடுமாறுகிறோம்.
No comments:
Post a Comment