Tuesday 7 June 2016

ிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள்
திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. நாள், நட்சத்திரம் பார்த்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் சொன்னதற்கு அர்த்தமுண்டு. அப்படி திருமணத்திற்கு நாள் பார்க்கும் போது நாம் கவனிக்க வேண்டிய சில விதிகளை பற்றி இங்கு பார்ப்போம்.

முதல் விதி :

✰ திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

இரண்டாவது விதி :

✰ சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

மூன்றாவது விதி :

✰ இயன்றவரை சுக்கில பட்ச (வளர்பிறைத் திதி) காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

நான்காவது விதி :

✰ புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.

ஐந்தாவது விதி :

✰ துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது நல்லது.

ஆறாவது விதி :

✰ முகூர்த்த லக்கினத்துக்கு 7 ஆம் இடம், முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

ஏழாவது விதி :

✰ அக்னி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

எட்டாவது விதி :

✰ திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

ஒன்பதாவது விதி :

✰ திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

பத்தாம் விதி :

✰ மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

பதினொன்றாம் விதி :

✰ கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் திருமணம் நடத்தக்கூடாது.

சதயம் நட்சத்திர தோஷம் நீங்க..!

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவானைக்காவல் இறைவனையோ, திருமீச்சூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமேக நாதரையோ, திருவருணையில் உள்ள வருணலிங்கத்தையோ வழிபட்டால் இன்னல்கள் எல்லாம் நீங்கி இன்பமுறுவர்.

No comments:

Post a Comment